ஆனந்த தாண்டவம்

Saturday, May 1, 2010

முக்கோண காதல் கதை.

என்ஜினீயரிங் படித்த சித்தார்த்தந்தை வேலை பார்க்கும் கிராமத்துக்கு வருகிறார். அங்கு மின் வாரிய அதிகாரி மகள் தமன்னாவின் குசும்பத்தனங்கள் பிடித்து காதலாகிறார். இருவருக்கும் திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்கின்றனர்.

திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. அப்போது அமெரிக்க பணக்கார இளைஞன் பெண் கேட்டு வரதமன்னா குடும்பம் மனம்மாறுகிறது. திருமணத்தை நிறுத்துகின்றனர். தமன்னாவும் அமெரிக்க மாப்பிள்ளையை மணக்க விரும்புகிறார். நொருங்கும் சித்தார்த்தன் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்படுகிறார். புத்திமதி சொல்லி அமெரிக்காவுக்கு உயர் படிப்பு படிக்க அனுப்புகின்றனர். அங்கு ருக்மணி நட்பாகிறார். தமன்னாவும் கணவருடன் அமெரிக்கா வருகிறார்.

சித்தார்த் நடத்தைகள் ருக்மணிக்கு பிடிக்க காதல். தமன்னாவும் சித்தார்த்தை சந்திக்க பழைய நட்பு மலர்கிறது.

ஒரு கட்டத்தில் தமன்னா கணவன் பல பெண்களுடன் தொடர்பு வைத்துள்ள விஷயம் தமன்னாவுக்கு தெரிய உடைகிறார் சித்தார்த்துக்கும் ருக்மணிக்கும் திருமண நிச்சய ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்கின்றனர். கணவனை உதறிவிட்டு சித்தார்த்தை கை பிடிக்க தமன்னா விரும்புகிறார். இருவரில் யாரை மணக்கிறார் என்பது கிளைமாக்ஸ்...

எழுத்தாளர் சுஜாதாவின் பழைய கதை திரைவடிவ மாகியுள்ளது. ஆழமான காதல், அமெரிக்க மோகம் இரண்டுக்கும் முடிச்சு போட்டு திரைக்கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் காந்தி கிருஷ்ணா, மலை பிரதேச ஜில்லிப்பும் சித்தார்த் தமன்னா ஒருத்தரை யொருத்தர் மாட்டிவிடும் குறும்புகளும் அழகானவை. கடைசி நேரம் மாப்பிள்ளை மாறியதால் குடித்து வாந்தி எடுத்து புலம்பும் சித்தார்த் அழுத்தம் பதிக்கிறார். பழைய காதலி கணவன் அயோக்கியன் என தெரிந்து அவளை காப்பாற்ற துடிப்பது நிறைவு.

தமன்னா முழு நடிப்பை வெளிப்படுத்தி கதையை தன் வசமாக்கி கொள்கிறார். விளையாட்டுத்தனங்கள், போதை அடிமைத்தனம் வாழ்க்கை சிதைந்து வலி. என நிறைய பரிணாமங்களை அள்ளித்தெளிக்கிறார். முடிவு பரிதாபம்.

தமன்னாவின் முதல் பாதி லூசுத்தன நடவடிக்கைகள் காதலின் வலிமையை குறைப்பதோடு கிளைமாக்சில் அவர் மேல் அனுதாபம் வருவதற்கு பதில் வெறுப்பை சிந்தவைக்கிறது. தன்னை தூக்கி எறிந்து இன்னொருவனை மணந்தவள் பின்னால் சித்தார்த் அலைவதும் கேரக்டரை சிதைக்கிறத. ருக்மணி கவிதையாய் அழகூட்டுகிறார். ஜி.வி. பிரகாஷ் இசை ஏமாற்றம். வைரமுத்து பாடல் வரிகள் மனதில் நிற்கிறது. சங்கர் கேமரா மலையழகையும் அமெரிக்க பிரமாண்டத்தையும் அள்ளி இறைக்கிறது.

Read more...

கார்த்திக் அனிதா

நட்பாக பழகும் இளம் ஜோடி காதலர்களாகும் கதை...

கோட்டா சீனிவாசராவும் ராஜன் பி.தேவும் நண்பர்கள், எதிர் எதிர் வீட்டில் வசிக்கிறார்கள். தோட்டாவின் மகன் ரத்தனும் ராஜன் பி.தேவின் மகள் மஞ்சுவும் சிறு வயது முதலே நட்பாக பழகுகிறார்கள். ஒரே கல்லூரியிலும் படிக்கின்றனர்.

ரத்தன்- மஞ்சு இடையே அடிக்கடி தகராறு. ஒருவரையொருவர் சிக்கலில் மாட்டி விட்டு சந்தோஷப்படுகின்றனர்.

பெண்களை ராக்கிங் செய்ததாக ரத்தன் மேல் ஆத்திரப்படும் கல்லூரி முதல்வர் தந்தையை அழைத்து வரச்சொல்கிறார் ரத்தன் போலி தந்தையை ஏற்பாடு செய்து முதல்வரை சந்திக்க வைக்கிறார். மஞ்சு இடையில் புகுந்து அவர் போலி என்று போட்டு உடைக்க ரத்தன் சஸ்பெண்டாகிறார். நட்பில் விரிசல் ஏற்படுகிறது. மஞ்சுவை பழி வாங்க துடிக்கிறார் ரத்தன்.

அப்போது மஞ்சுவுக்கு திருமண ஏற்பாடு நடக்கிறது. ரத்தனை பிரிய மனமின்றி காதல் வயப்படுகிறார் மஞ்சு. திருமண தேதி நெருங்க ரத்தனுக்கும் காதல் பிறக்கிறது. இருவரும் காதலை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். பின்னர் எப்படி இணைந்தார்கள் என்பது கிளைமாக்ஸ்...

இளமைப்பொலிவோடு காதல் ரசம் சொட்ட கதையை நகர்த்தியுள்ளார் இயக்குனர் ஸ்ரீஹரி... ரத்தன், மஞ்சுவின் சிறுசிறு முட்டல் மோதல்கள் ரசனையானவை... ரோட்டில் கோடு போட்டு பந்தயம் கட்டி ஒருத்தருக்கொருத்தர் தலையில் கொட்டி சேர்ந்து விழுவது ஆரவாரம். ரத்தனின் நண்பர்களை மாட்டி விட்டு மஞ்சு சண்டை போடுவது யதார்த்தம்.

திருமணம் நிச்சயமானதை ரத்தனிடம் மஞ்சு வருத்தமாய் சொல்ல சனியன் ஒழிந்தது என அவர் சந்தோசத்தில் குதிப்பது... எதிர்பாராதது...

தந்தை இறந்ததும் ஆதரவற்ற ரத்தனுக்கு உணவு தந்து அக்கறை காட்டும் மஞ்சுவின் அன்பு அழுத்தம்... மஞ்சு மேல் தனக்குள்ளும் காதல் ஒளிந்திருப்பதை உணரும் ரத்தன் அதை வெளிப்படுத்த இயலாமல் தவிக்கையில் மனதில் நிற்கிறார். பெங்களூரில் வேலைக்கு சென்ற பின் ரத்தனும் தன்னை காதலிப்பதை ரூபாய் நோட்டில் அவர் எழுதி வைத்திருப்பதில் இருந்து அறிந்து மஞ்சு அழுது துடிக்கும் போது எல்லோரையும் அழ வைக்கிறார். இருவரும் போட்டி போட்டு காதலை பிழிந்துள்ளனர்.

வில்லனாக பார்த்த கோட்டா சீனிவாசராவும், ராஜன் பி.தேவும், குணச்சித்திர வேடத்தில் பளிச்சிடுகின்றனர். அடடே மனோகர், சிங்கமுத்து காமெடி கலகலப்பு...

பழைய கதையை புதுசாக்கியுள்ளனர். முதல் பகுதியில் இருந்த வேகம் பிற்பகுதியில் குறைந்தாலும் காதல் நெஞ்சை நிரப்புகிறது. கிளைமாக்ஸை இன்னும் மெருகேற்றி இருக்கலாம். ஜாக் ஆனந்த் இசையில் பாடல்கள் கேட்கலாம்.

Read more...

கதை சொல்லும் கேட்கும் பழக்கம் உண்டா ?

கதை சொல்லும் பழக்கம் உண்டா ? / கதை கேட்கும் பழக்கம் உண்டா ? என நான் என் நண்பர்களைக் கேட்பதுண்டு. இக்கேள்விக்குக் கிடைக்கும் பதில்கள் கதை என்பதன் பொருள் இன்று எவ்வாறு புரிந்து கொள்ளப்படுகிறது என்ற வியப்பு எனக்கு ஏற்ப்பட்டது.
கதை என்ற சொல்லுக்கு நிகழ்ச்சி, செய்தி, நிகழ்ச்சி விபரம், விரிவுரை, விளக்கம், சென்ற கால வரலாறு, தோற்ற வளர்ச்சி விபரம், பத்திரிகைச் செய்தி, பத்திரிகைக் கட்டுரை, வாய்மொழிக் கூற்று, நம்ப முடியாதச் செய்தி, காலம் கடந்த செய்தி, கட்டுக்கதை, பொய், சுருக்கிக் கூறுவதானால் விவரங்களை விட்டு விட்டுக் குறிப்பாகப் புலப்படுத்துவது எனப் பல பொருள் இன்று உண்டு.
கதைச் சொல்லுபவர்களுக்குக் கதை கூறுவோர், கதைஞர், கதை எழுத்தாளர், கதாசிரியர், கதையளப்பவர், குழந்தை வழக்கில் பொய்யர், புளுகர் எனவும் பல பொருள் உண்டு.
ஒரு 'கதைச்சொல்லி', 'கதை' என்பதற்கு பயன்படுத்தும் கட்டமைப்பு பொதுவாகப் பின் வரும் நான்கு நிலைகளில் அமையும்.
1. நிகழ்ச்சி
2. இரண்டு வழிகளில் ஒன்றைத் தேர்வு செய்யவேண்டிய நிலை
3. விளைவாக உண்டான செயல் (காரண காரியத் தொடர்பு)
4. பலன். (உள்ளார்ந்த அல்லது வெளிப்படையான)
ஒரு நல்ல கதைச்சொல்லியை இனம் காண என் மனதில் தோன்றும் சில கேள்விகள்.
1. கதையின் பரிமாணம் என்ன ?
2. மாற்றம் என்பது கதையில் எங்கு எவ்விதம் சொல்லப்படுகிறது ?
3. தற்போதைய சூழ்நிலைக்கு இக்கதை எவ்விதம் பொருந்துகிறது ?
4. கதைச்சொல்லியின் நாக்கு இக்கதையைச் சொல்ல முடிவெடுத்தது எப்படி ?
5. இக்கதை கதைச்சொல்லியால் ஏன் இப்படிச் சொல்லப்படுகிறது ?
6. கதைச்சொல்லியின் புலனுணர்வு கதையில் வெளிப்படுகிறதா ?
கதை பொதுவாக கதை கேட்பவரின் வாழ்க்கைச் சூழ்நிலைகளை விவரித்துச் சொல்லப்படும் காலம் என்ன என்பதை உணர வைப்பது. கதை என்பது வாழும் காலத்தின் கலாச்சார சூழ்நிலைகளின் பிரதிபலிப்பு என்றும் சொல்லப்படுவதுண்டு.
ஒரு கருத்தாழமிக்க கதையைச் சொல்லிக் கதை கேட்போரைக் கவர்வது என்பது கதை சொல்பவர் உணர்ந்த தீர்வையும், முடிவையும், கதை கேட்பவரும் அதே அலைவரிசையில் உணரவைப்பதும், கதை கேட்பவரை அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று செயலாற்றத் தூண்டும் சக்தி படைப்பதில் உள்ளது என்பேன்.
கம்ப்யூட்டரில் ஃபிளாஷ் / பவர் பாயிண்ட் பயன்படுத்திக் கதை சொல்லும் உத்தி எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. சிறிய ஃபிளாஷ் வடிவில் தேர்ந்த ஒலி நயத்துடன் உருவாக்கப்பட்ட கதைகள் இணையத்தில் எங்காவது உண்டா ?
'கதைச்சொல்லி' கதையை வாய்விட்டுச் சொல்வதும், அதனைக் கேட்பவர் உடனே அதற்கு எதிர்வினையாற்றும்படியாக ஒரு சூழலும் இன்று இல்லை. அந்த வாய்ப்பு ஏன் குழந்தைகளுக்கு மட்டும் உள்ளது ?
நான் என் சிறு வயதில் வரலாறு பாடத்தில் வந்த ஒரு நிகழ்ச்சிக்குக் கேட்ட கேள்வி இன்றும் நினைவில் உள்ளது. அசோகர் குளம் வெட்டினார், சாலையோரம் மரம் நட்டார் என்று வாய்விட்டுச் சொல்லிக் கொடுத்த ஆசிரியரிடம், குளம் வெட்டட்டும், மரம் நடட்டும் அதுக்கென்ன வந்தது ? இதிலென்ன விசேஷம் ? என்று கேட்ட கேள்விக்குப் புரியும்படியாகச் சரியான பதில் கிடைக்கவில்லை. அச்செயலுக்குப் பின் உள்ள பொருள் ஒன்றல்ல பல.
இன்று கதை என்பது ஒலி/ஒளிபரப்பு மூலமாக, மென் நூல்/புத்தக வடிவில் வாசிக்க, இணையத்தளங்கள் மூலமாக என கேட்பவரின் பங்களிப்பு என்பதை பின் நகர்த்தி, சொல்ல வந்ததைச் சொல்லிவிட்டுப் போவதும், புரிந்து கொள் அல்லது தலையைச் சொரிந்து கொள் என்று பல நிலைகளியில் உள்ளது.
நாம் கதைகள் சூழ்ந்த உலகில் வாழ்கிறோம். மறக்க முடியாத கதைகள் என்பது நம் வாழ்நாள் முழுவதும் நம் நினைவில் நீச்சல் அடிப்பவை. கதைகள் நாம் வாழும் சமூகத்தை நாம் அறிந்த அறிவிற்கு ஏற்றபடி புரிந்துகொள்ள உதவுபவை. நாம் கதைகளை முடிவெடுக்கவும், சண்டைச் சச்சரவிலிருந்து விடுபடுவதற்கும், வழிகாட்டுதலுக்கும் மேலும் சில தகவல்களை அறியவும் பயன்படுத்திக்கொள்கிறோம்.
'கற்பனையைத் தூண்டுவது' என்று கதைப் பற்றிக் சொல்வதைக் கேட்டு நான் யோசிப்பதுண்டு. கற்பனையைத் தூண்டி கனவுலகில் சஞ்சரிக்க ஒரு கதை உதவினால், அக்கற்பனை என்பது நல்ல கனவுகளை ஏற்படுத்தினால், அக்கனவு நல்ல செயலையும், அச்செயல் நல்ல விளைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. கெட்ட கனவும் ஏற்பட்டு தீமைகள் பலவும் நிகழ்வது யதார்த்தமான ஒரு உண்மை.
எனக்கு ஒரு கதை என்பதை எப்போது(மே) எப்படி சிறப்பாகப் பயன்படுத்த முடியும், மேலும், ஏன் அவ்வாறு செய்ய முடிவதில்லை என்ற கேள்வி உண்டு.
கதைகள் சொல்லும் நீதி என்பது சிலவற்றில் வெளிப்படை. பலவற்றில் உள்ளர்த்தம். மேலும் பலவற்றில் இல்லவேயில்லை என்றும் சொல்லலாம்.
இந்தச் சூழலில் எந்தவிதமானக் கதையைக் 'கதைச்சொல்லி' சொல்ல வேண்டும் என்று கேட்டால், அது கதை கேட்பவரின் தகுதியைப் பார்த்து சொல்லாம் என்ற பதில் வரும்.
சொல்லப்பட்டக் கதையை ஒரு நபர் புரிந்து கொண்டு பயன் அடைவதற்கும், அக்கதையால் கேட்பவர்க்கு ஒரு பயனும் இல்லாமல் போவதற்கும் சரிசமமான வாய்ப்பு உண்டு.
ஒருவர் நல்லவரா அல்லது கெட்டவரா ?
வாழ்க்கைப் பற்றிய எந்தவித மதிப்பீடுகள் ஒருவரை உயர்த்தும்?
எனது இச்செயல் எனக்கு நற்பெயர் தருமா அல்லது கெட்ட பெயர் தருமா?
எனது தவறுகளுக்கு என்னால் பாதிக்கப்பட்டவரின் எதிர்வினை என்பது எப்படியிருக்கும் ?
மேலும் அதற்கு நான் என்ன செய்வது ?
போன்ற கேள்விகளுக்கு விடை தேட நான் கதை கேட்பதுண்டு.
எனக்குக் கதை சொல்லும் கதைச்சொல்லிகள், என்ன நடந்தது என்று மட்டும் சொல்லிவிட்டு என்ன செய்யலாம் என்பதை விவாதத்திற்கு விடும் காலம் ஒரு சவாலான இடம்.
நல்ல 'கதைச்சொல்லியை' இனம் காண்பது சற்று கடினம். நல்ல கதைச்சொல்லியும் கதையும் அமைவது நம் கையில் தான் உள்ளது. கதைச்சொல்லி என்பவர் நம்மைவிட வயதில் சிறியவரக இருக்கலாம், பல விதத்தில் நமக்கு இணையானவராக இல்லாமல் இருக்கலாம் ஆனால். அவரிடம் உள்ள கதையைச் சொல்ல வைக்கும் ஆற்றல் நம்மிடம் மட்டுமே உண்டு. அவராக வந்துச் சொல்வது என்பது இன்றைய காலத்தில் நடவாத காரியம்.

Read more...

ஓஷோவின் வாழ்க்கையிலே ஒரு சம்பவம்

 
ஓஷோ பல்கலைக்கழகத்திலே படிச்சு கிட்டிருந்தபோது மாணவர்களுக்கான சாரணர்
அணியிலே சேர்ந்திருந்தார். பயிற்சி கொடுக்கிறபோது சார்ஜன்ட், "லெப்ட்
டேர்ன் ரைட் டேர்ன்" அப்படீன்னு சொல்லுவார். எல்லா மாணவர்களும்
திரும்புவாங்க. ஓஷோ திரும்பமாட்டார்.
சார்ஜண்ட் வந்து கேட்பார் "ஏன்? காதிலே ஏதும் கோளாறா" அப்படீன்னு. ஓஷோ
சொன்னார், "காதிலே எந்தக் கோளாறும் இல்லை. இடது பக்கமோ வலது பக்கமோ
எதுக்காகத் திரும்ப னும்ணு யோசிச்சேன், அதனால திரும்பலை" அப்படீன்னு.
நான் பொதுவாச்சொல்றேன், ஒரு சிந்தனையாளர் – எதிர் காலத்திலே ஞானியாக
மலரப் போகிறவர் – சாரணப் பயிற்சியிலே வெற்றி பெறலை. அவருக்குப் பொருந்தாத
துறையிலே சாதிக்கணும்னு அவர் நினைக்கலை.

இன்னைக்கு என்ன நடக்குது? ஏதாவது ஒரு துறையிலே முயற்சி செய்து தன்னால
அதில் ஈடுபட முடியாதபோது, ஒண்ணு, மன உறுதியோடு மறுபடியும் முயற்சி செய்து
ஜெயிக்கலாம். இல்லை, மனசு ஒத்து "இது நம்ம துறை இல்லை", அப்படீன்னு முடிவு
பண்ணி நகர்ந்துடலாம்.

ஆனா, சிறிசா ஏற்படற தோல்வியை ரொம்பப் பெரிசா எடுத்துட்டு, நாம எதுக்குமே பொருந்தவில்லை போலிருக்கு அப்படீன்னு பலபேர் நினைச்சுடறாங்க?
நான் பொதுவாச் சொல்றேன், ஒரு விஞ்ஞானி கவிஞராக முயற்சி செய்தால் அந்தப்
பரிசோதனை தோல்வியிலே முடியும். ஒரு கவிஞன் விஞ்ஞானியாக முயற்சி செய்தால்
அதுவும் பாதியிலே திசை திருப்பும். (அப்படி ஒரு கவிஞர் பாதியிலே விஞ்ஞானப்
படிப்பை விட்டு வெளியேறி, பிறகு தமிழ் படிச்சு இப்ப ரொம்பப் பிரபலமா
இருக்கார். யார்னு சரியா எழுதற முதல் மூன்று வாசகர் களுக்கு, அந்தக்
கவிஞருடைய புத்தகம் பரிசாக அனுப்பப்படும்)

அதனாலே, எல்லோரும் எல்லாமும் ஆக முயற்சி செய்யாம, தங்கள் தனித்தன்மை
என்னான்னு தெரிஞ்சு அந்தத் துறையிலே சிறந்து செயல்பட எல்லா முயற்சியும்
எடுத்துக்கணும்.

"எல்லாருக்கும் ஒவ்வொன்று எளிது" அப்படீன்னு ஒரு பழைய பாட்டு இருக்கு.
நான் பொதுவாச் சொல்றேன், நாம் எதை விரும்ப றோமோ அதை ரசிச்சு
செய்கிறபோது அந்த வேலை ஒரு சுமையாத் தெரியாது. சுகமாத் தெரியும். அதை
விட்டுவிட்டு, வராத துறையிலே முயற்சி செய்து தன்னைத் தானே எதற்கும் உதவாத
ஆள்னு முடிவு செய்யறது ரொம்ப தப்பு.

நம்ம வாழ்க்கையிலே நடக்கிற சம்பவங்கள் ஒவ்வொண்ணும் மறந்து போறதுக்காக
இல்லை. திரும்பத் திரும்ப நினைச்சுப் பார்த்து, அதிலே பயன்படக் கூடிய
விஷயங்களை மத்தவங்களுக்கு சொல்றதுக்காகத்தான்.

ஓஷோவைப் பற்றி ஆரம்பத்திலே சொன்னேன். அவர் மகாத்மா காந்தியடிகளைப் பல
இடங்களிலே மிகக் கடுமையா விமர்சனம் செய்திருக்கார் ஆனா, காந்தியடிகளுடைய
சுயசரிதையைப்பற்றிச் சொல்கிறபோது. "இவ்வளவு வெளிப்படையா, தன்னைப் பற்றித்
தானே விஞ்ஞானப்பூர்வமா ஆய்வு செய்து எழுதறது ரொம்ப கஷ்டம்" என்கிறார் ஓஷோ.
நான் பொதுவாச் சொல்றேன், எல்லா விஷயங்களைப் பற்றியும் நாம சரியா
கருத்துச் சொல்வோம். நம்மைப் பற்றி தெளிவாக இருக்கறோமா? "என்னைப் பற்றி
என்ன நினைக்கிறீங்க" அப்படீன்னு அடுத்தவர்களைக் கேட்போம் இது தேவையில்லை.
நம் பலங்களைப் புரிஞ்சுக்கறதும் நம் பலவீனங்களைப் புரிஞ்சுக்கறதும் தான் உண்மையிலேயே நம்மைப் புரிஞ்சுக்கறது!

நம்மை உணர்வதே உண்மையை உணர்வது

உண்மையை உணர்வதே உயர்வுகள் தருவது.

Read more...

பின்லேடனும் ப்ரானிக் ஹீலிங்கும்!

கோவையில் எனக்குத் தெரிந்த துன்பர் (அன்பர் என்பதன் எழுத்துப்பிழை அல்ல) ஒருவர் இருக்கிறார். ரொம்ப சாந்த சொரூபியான முகம், பகவான் ரஜனீஷின் ஓன் பிரதர் போல சுய எண்ணம், அவரைப்போலவே தாடி, தொப்பை என்று அடையாளங்கள். ரயில்வேயிலிருந்து விருப்ப ஓய்வு பெற்ற ஆசாமி. பெயர் வேண்டாம். துன்பர் வருத்தப்படுவார்.

பத்து வருடங்களுக்கு முன்னால் ஒரு பதிப்பகத்தின் வேலைகளைத் தூக்கிக்கொண்டு அவ்வப்போது அலுவலகத்துக்கு வருவார். பெரும்பாலும் அது மதிய நேரமாகவே இருக்கும். இதனால் ஏதாவதோர் ஓட்டலில் ஃபுல் மீல்ஸ் கட்டிவிட்டு நேராக வந்துவிடுவார். என்னிடம் சமர்ப்பிக்க வேண்டியவைகளை சமர்ப்பித்துவிட்டு நான் கணினியில் வேலையை ஆரம்பித்ததும் முன்னால் உள்ள இருக்கையில் தன் தியானத்தை ஆரம்பித்து விடுவார். உலகத்திலேயே தியானம் செய்யும்போது குறட்டை விடும் ஒரே தவஞானி அவர்தான். அவரது குறட்டையொலி வேலையைக் கெடுக்க ஆரம்பிக்கும்போது பேப்பர் வெயிட்டை எடுத்து அந்த ஆட்டுமண்டை மீது வீசவேண்டும் என்கிற ஆவலை அடக்கிக்கொண்டு, தடால் புடால் என்று எழுந்துகொள்வதோ, சப்தமெழுப்பக்கூடிய ஒன்றைக் கீழே போடுவதோ ஓரளவு பயனைத் தரும். அடிக்கடி புனேக்குப் போய்வருகிற பழக்கத்தையும் அப்போது அவர் கொண்டிருந்தார். அமிர்த யாத்ரிகன் என்கிற பொருள்படும் பெயரும் அவருக்கு ஓஷோவின் ஆசிரமத்திலிருந்து கொடுக்கப்பட்டிருந்தது.

உலகத்திலேயே உண்மையான சமத்துவம் பேணப்படும் ஒரே இடம் ஓஷோ ஆசிரமம்தான் என்பதைத் தன்னை அறிந்தவர்களுக்கெல்லாம் சொல்லாமல் சொல்லிக்கொண்டே அவரது யாத்திரை நிகழ்ந்துகொண்டிருந்தது. எவன் வேண்டுமானாலும் அங்கே போய் தீட்சை பெற்றுக்கொள்ளலாம் என்கிற அளவுக்கு ஓஷோவுக்குப் பிறகு அங்கே சமரசம் நிகழ்ந்துவிட்டிருக்க வேண்டும். ஏனென்றால் ஓஷோ என்கிற பகவான் ரஜனீஷ் இருந்த காலத்தில் இவரைப் போன்ற ஒருவர் உள்ளே போயிருந்தால் உதைத்தே அனுப்பியிருப்பார்.

இவ்வளவு சிறப்புத் தன்மைகள் வாய்ந்த துன்பர் ஒருநாள் அற்புதம் ஒன்றை நிகழ்த்திக்காட்டினார். சிறிது காலமாக, தான் ப்ரானிக் ஹீலிங் என்கிற ரெய்கி வைத்திய முறையைக் கற்று வருவதாகச் சொல்லி தன் பராக்கிரமத்தை என் உள்ளங்கையில் கொட்டிக் காட்டினார். அதாவது, என் இடது உள்ளங்கையை விரித்தபடி நீட்டச் சொன்னார். நானும் இந்த டுபாக்கூர் என்னத்தைப் பெரிதாய்க் கிழித்துவிடப்போகிறது என்கிற தைரியத்தில் கையை நீட்டித் தொலைத்தேன். தன் உள்ளங்கைகளைச் சற்று பரபரவென்று தேய்த்துவிட்டு கிட்டத்தட்ட ஐந்தடி தூரத்தில் தன் வலது உள்ளங்கையை என் இடது உள்ளங்கையைப் பார்க்குமாறு நீட்டினார் அவர். எனது இடது உள்ளங்கையில் எர்த் அடித்ததுபோல சிறு ஷாக்கை உணர்ந்தேன். பதறிப்போய் கையை உதறினேன். துன்பர் மூஞ்சியில்தான் என்னே ஒரு புஞ்சிரி!

சரி, இப்போது எதற்கு இந்த சம்பவம் என்று கேட்கிறீர்களா? காரணம் இருக்கிறது. சிறிது காலம் கழித்து ஓர் இளம் துறவியின் பெருமைகளைப் பேண ஆரம்பித்தது துன்பரை அடிக்கடி என்மீது ஏவிவிடும் அந்த வாடிக்கையாள நிறுவனம். பெயர் வேண்டாம். நிறுவனம் வருந்தும்.

அந்தத் துறவியின் சில புகைப்படங்களை என்வசம் காட்டி அவருக்கு ஒரு சிறு புரோஷர் டிசைன் செய்ய வேண்டும் என்பதாக அது கேட்டுக்கொண்டது. திருவண்ணாமலையின் பின்னணியில் சில படங்கள் காணப்பட்டன. ஹடயோகி போல ஆசனங்களில் காணப்பட்டார் இளம் துறவி. புகைப்படங்களிலிருந்து அவர் ஒரு பாலயோகி என்பது நன்றாகவே தெரிந்தது. பாலயோகிக்கு கர்னாடகத்தில் ஆசிரமம் அமைக்க யாரோ கொடுத்திருந்த இடத்தின் படங்களும் அதில் இருந்தன. அந்த இடம் வெறும் பொட்டலாக இருந்ததாகவும் ஏதோவொரு மரத்தின் புகைப்படம் மட்டும் அவற்றில் திரும்பத் திரும்ப இடம் பெற்றதாகவும் ஞாபகம்.

எந்தக் காரணத்தாலோ அந்த வேலையை நான் செய்துகொடுக்கவில்லை. அதோடு அவர் எனது வாடிக்கையாளரைக் காட்டிலும் பெரிய மனிதர்களின் கண்களில் பட்டு இப்போது மேலும் புகழ்பரவத் தொடங்கியிருந்தார் என்பதை மட்டும் நான் அவ்வப்போது கவனித்து வந்தேன். ரிஷிகேசத்தின் மூலரான சிவானந்தர் முதலான யோகிகள் பிறந்த இந்தத் தமிழ் பூமியில் இவ்விதமான பாலயோகிகள் பிறப்பதும் பிராபல்யம் பெறுவதும் உவப்பான செய்திகள்தானே!

(இருந்தாலும் எனக்கு இந்த பால யோகிகளைப் பார்த்தாலே பங்காளியைப் பார்த்ததைப் போல பற்றிக்கொண்டு வரும். இவருக்கு யோகி என்கிற புகழாவது இருக்கிறது. அதை வைத்துக்கொண்டாவது தீண்டுவதற்குப் பெண்களே கிடைக்காத கழிவிரக்கத்தைத் துடைத்துக்கொள்ளலாம். எனக்கு அதற்குக்கூட வழியில்லையே என்பதே அடிப்படை ஆதங்கம்!)

அதன்பிறகு லக்ஷக்கணக்கில் விற்பனையாகும் ஒரு தமிழ் வாரப்பத்திரிகை பாலயோகியைத் தங்கத் தாம்பாளத்தில் தாங்க ஆரம்பித்தது. அவர் எழுதியதாக மற்றவர்கள் எழுதிய தொடர் கட்டுரைகளை அது தொடர்ந்து வெளியிட ஆரம்பித்தது. இதனால் அவரது புகழ் பட்டி தொட்டியெல்லாம் பரவ ஆரம்பித்தது. அந்த வாரப்பத்திரிகை சார்ந்த ஒரு முக்கிய நபருக்கு இருந்த உடற்கோளாறை பாலயோகி தன் சக்தியால் தீர்த்து வைத்ததால்தான் இந்த தண்டோரா வைபவம் என்பதாக அரசல் புரசலாக பேச்சு எழுந்தது. ஏனென்றால் அந்த வாரப்பத்திரிகை இப்படி வேறு யாரையும் அதுவரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியதேயில்லை என்பதே பதிவு.

அந்தப் பத்திரிகையில் வரும் அவரது தொடரை வேகமாகத் தாண்டிப் போய்விடுவது எனது இயல்பு. பொறாமையால் அல்ல. அதுவே எனது இயல்பு. அவரது கட்டுரை என்பதல்ல, வாரப்பத்திரிகைகள் வெளியிடும் எந்தத் துறவியின் கட்டுரைகளையும் வாசிப்பது எனக்கு வழக்கமில்லை. அதோடு மீசையில்லாதவோர் ஆணின் முகத்தைப் பதித்திருக்கும் அந்தப் பக்கங்களில் பார்க்கவும்கூட என்ன இருக்கிறது? பெண்கள் பக்கம் என்றாலாவது பேணிப் பாதுகாக்கலாம்!

இதற்குள் பாலயோகி கிருஷ்ணாவதாரமே எடுத்துவிட்டார் என்பதை அவ்வப்போது யாராவது சொல்லக் கேட்க நேரும்போது ஆச்சர்யமாக இருக்கும். அட எழுத வருகிறது என்பதற்காகக் குடிப்பதைப்பற்றி நாவல் எழுதியதற்கு பதிலாக யோகம் பயின்று மானுடம் உய்யவாவது எதையாவது எழுதிக்கொடுத்திருக்கலாமே என்று வருத்தமாகவும் இருக்கும். ஏனென்றால் முன்னேறாதவர்கள் சுயமுன்னேற்றத்திலும் முன்னேறியவர்கள் ஆன்மிகத்திலும் மட்டுமே நாட்டம் செலுத்தும் யுகம் இது. இதில் இலக்கியவாதிக்கு என்ன வேலை இருக்கிறது!

பாலயோகி பெரும் விஐபிகளைக் கவர ஆரம்பித்திருந்தபோது எழுத்தாளர் சாருநிவேதிதா அவரைப்பற்றி பேச ஆரம்பத்ததைத் கேட்டேன். சாருவிற்கு ஷீரடி சாய்பாபாவின் மீது நம்பிக்கையும் பக்தியும் வந்ததைப் பற்றி தன் பைபாஸ் சர்ஜரி காலத்தை நினைவுகூர்ந்து அவர் எழுதியிருப்பவையும் என்னிடம் நேரிலேயே சொன்னவையும் எனக்கு நன்றாகவே நினைவிருக்கின்றன. இறந்தவர்களை நேரில் பார்க்கவோ தெய்வத்தின் அருகாமையை உணரவோ எல்லோருக்குமா வாய்க்கிறது! சாரு அதை உணர்ந்ததாக சொன்னபோது என்னால் நம்பாமலும் இருக்க முடியவில்லை, நம்பவும் முடியவில்லை. ஏனென்றால் அவர் பொய் பேசுவதில்லை. தனக்கு சரி என்று பட்டதை மற்றவர்களிடம் அவர் சொல்லும்போது அவர்கள் அதை புருடா என்று நினைத்துவிடுவது வழக்கமாக இருக்கிறது. ஏனென்றால் அவர் சொல்கிற விஷயங்கள் சாமான்யர்கள் அனுபவித்திராதவையாக இருக்கும். இந்தக் குறிப்பிட்ட நடிகையை முத்தமிட எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று அவர் சொன்னால் அந்த நடிகையை முத்தமிட விரும்பும் அத்தனை பேரும் அவர் பொய் சொல்கிறார் என்று பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். இதே அடிப்படையில்தான் கடவுளை உணர்வதும் கவனிக்கப்படவேண்டியதாகிறது.

ஆனாலும் தானாக உணராமல் என்னால் எதையும் நம்ப முடிவதில்லை. இந்த ஒரு காரணத்தால் மட்டுமே எனக்கு atheist என்கிற பதம் பொருந்திப்போகலாம். ஆனால் நான் ஒரு உண்மையான ஆன்மிகவாதி என்பதே உண்மை. ஆன்மிகத்தையும் மதத்தையும் கலந்து பார்க்கிற சமூகத்திலிருந்து நான் எப்போதோ விலகிவிட்ட காரணத்தால் இதை உரத்துச் சொல்ல முடிகிறது.

தெய்வத்தை உணரவேண்டுமானால் மதங்களின் வேதங்களை வாசிப்பது முதல் படியாக மட்டுமே இருக்க முடியும். அவை தெய்வத்துக்கும் உங்களுக்கும் இடையே எழுப்பப்பட்டிருக்கும் சுவர்களேயன்றி வேறல்ல. அவற்றின் மீது ஏறியும் அப்பால் குதிக்கலாம். அவற்றின் இருப்பைப் புறக்கணிப்பதன் வாயிலாகவும் அவை தானே நகர்ந்து செல்வதை உணரலாம். எப்படி வந்து சேர்ந்தாலும் சேருமிடம் ஒன்றுதான். அது வெற்றிடம். வெளி. உள்ளேயிருக்கிற வெளியை வெளியேயிருக்கும் வெளியோடு ஐக்கியமாக்கிவிட முடிகிற சூத்திரங்களைப் பயின்ற எத்தனையோ தவஞானிகளை இந்த உலகம் பார்த்திருக்கிறது. இதனால் என்னால் செய்ய முடியாதபோதும் ஒரு தவஞானி தன்னுள் சேர்த்து வைத்திருக்கும் சக்தியைப் பார்த்து நான் மயங்குகிறேன்.

இம்மாதிரியான மயக்கங்கள் பல நிலைப்படுகின்றன. சாருநிவேதிதா தன் வாழ்வின் நுண்ணிய பொழுதொன்றில் வேறொரு ஞானியிடம் பெற்ற நம்பிக்கையை இந்த பாலயோகி சுலபமாகக் கவர்ந்துவிட்டார் என்பதாகவே இந்த விஷயத்தில் எனக்குத் தோன்றுகிறது. இதனாலேயே சாரு அவரைப்பற்றி பெரிதும் புகழ்ந்து தள்ளுவது தவிர்க்க இயலாததாக இருந்திருக்கலாம். ஆனால் உண்மையான நம்பிக்கை உள்ள ஒருவனின் நம்பிக்கை பொய்த்துப்போகும்போது அவநம்பிக்கை வெள்ளத்தையும் ஒருவர் எதிர்கொண்டேயாகவேண்டும். அதிகமாகவே பாலயோகியை நம்பிய காரணத்தாலேயே அவரைப் பற்றிய அவநம்பிக்கையும் பேரதிகமாகவே பிரவகிக்கிறது. இதை உணராமல் இணையத்தில் பலரும் சாருவை நையாண்டி செய்துகொண்டிருப்பதைப் பார்த்து எனக்கு வருத்தமாக இருக்கிறது. இப்படித்தான் ஜெயமோகனை இந்துத்துவா என்று சிலகாலம் பலரும் குற்றஞ்சாட்டிக்கொண்டிருந்தார்கள். இதனால் அவர் இந்துத்துவாவுக்கு எதிராக ஏதாவது எழுதட்டுமே என்பது உள்நோக்கமாக இருந்திருக்கலாம்.

சரி, பாலயோகிக்கும் ப்ரானிக் ஹீலிங்குக்கும் திரும்பவும் வருவோம். தற்போது ஸ்ரீகிருஷ்ணனாக பாவிக்கப்படும் பாலயோகியான நித்யானந்தரை பலரும் தூற்றவும் போற்றவும் அங்கதம் செய்யவுமாக இருக்கும் ஒரு நிலையில்; அரசும் தன் சனநாயக வழக்கப்படி அவருக்கு ஆதரவு எவ்வளவு இருக்கிறது எதிர்ப்பு எவ்வளவு இருக்கிறது என்கிற கணக்கீட்டில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் வேளையில்; பின்லேடன் போல நித்யானந்தர் எங்கிருந்தோ வீடியோக்களை அனுப்பிக்கொண்டிருக்கும் சூழலில் இதை எழுதுகிறேன்.

கட்டுரையின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட துன்பருக்கும் நித்யானந்தருக்கும் உள்ள முக்கியமான தொடர்பு ப்ரானிக் ஹீலிங் எனும் வைத்திய முறைதான். வாழ்வில் எந்த ஒழுக்கங்களும் இல்லாமல் இஷ்டப்படி வாழ்ந்து, மத்திய சர்க்கார் உத்தியோகத்தில் ரயிலில் அலைந்து, வீயாரெஸ் வாங்கி அதன்பிறகு ஓஷோவின் ஆசிரமத்துக்குப் போய்ப் பார்க்கலாமா என்று ஆரம்பித்து ப்ரானிக் ஹீலிங் எனும் ரெய்கி எனும் உடலின் சக்தியைப் பெருக்கி அதன் வாயிலாக நோய்களைத் தீர்க்கும் உடற்புள்ளிகளைத் தீண்டும் கலையைக் கற்க முயன்று தோற்ற ஒரு துன்பராலேயே தன் உடலிலிருந்து மற்றவர் உடலுக்குள் உணரக்கூடிய வகையில் ஓர் எனர்ஜியை செலுத்த முடியும் என்பது உண்மையானால், நித்யானந்தர் போன்ற பால யோகியின் உடலில் எவ்வளவு எனர்ஜி இருக்கக்கூடும்! அந்த எனர்ஜியைக்கொண்டு அவர் ஒரு ப்ரானிக் ஹீலராக வைத்தியம் மட்டும் பார்த்துக்கொண்டிருந்தால் அவர் ரஞ்சிதாவோடு கொஞ்சினால் என்ன, அஞ்சிதாவோடு துஞ்சினால் என்ன! யாரால் கேள்வி கேட்க முடியும்?

அதோடு இந்தப் பிரச்சனையை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஒரு அடைப்புக்குள்ளும், ஆதரிப்பவர்கள் அனைவரையும் ஒரு அடைப்புக்குள்ளும் வைத்து மயங்குவதே பொதுவான குழப்பத்துக்கான மூலம். ஒரு மகானிடம் ஒரு சீடன் பெறும் அனுபவமும் ஒரு பக்தன் பெறும் அனுபவமும் முற்றிலும் வேறானவை. அதேபோலத்தான் ஒரு சீடன் எதிர்கொள்ளும் வெறுப்பும் ஒரு பக்தன் எதிர்கொள்ளும் வெறுப்பும் சமம் என்று கருதுவதும் முட்டாள்தனமாகவே ஆகமுடியும்.

இருந்தாலும் வைத்தியரை கடவுள் என்று கொண்டாடும் சமூகம் அவர் ஓர் ஆன்மிக மகானாகவும் தென்பட்டால் அவரை தேவாதிதேவன் என்று போற்றுவது இயல்பானதே. அந்த இயல்புதான் இந்தப் பிரச்சனையின் உண்மையான பிரச்சனை.

இதில் நித்யானந்தாவின் நியாயம் என்ன?

வெறும் ப்ரானிக் ஹீலராக மட்டுமே இருந்திருந்தால் அவரால் இத்தனை உயரத்துக்குப் போயிருக்க முடியுமா? ஆன்மிகம் கொடுத்த செல்வத்தை அவருக்கு வைத்தியம் கொடுத்திருக்குமா? (நல்லகாலம், இந்த வருடத்தைய உலகப் பணக்காரர்களின் பட்டியலில் அவர் பெயர் இல்லை).

அதோடு ப்ரானிக் ஹீலிங் என்கிற வைத்திய முறையை இந்திய அரசு அங்கீகரித்துவிட்டதா என்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும். இத்தனை பெரிய கோபுரத்தை ஒருவரால் ஒரு வைத்தியமுறையை வைத்துக்கொண்டு எழுப்ப முடியும் என்றால் அதன் பலன் என்ன என்பதை ஆராயவேண்டும் என்கிற எண்ணம் ஏன் இந்திய அரசுக்கு எழாமலே போகிறது? எதற்கெடுத்தாலும் அலோபதி என்கிற ஆங்கில மருத்துவமுறையின் கொடியையே உயரப் பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கும் இந்திய அரசு இந்த நேரத்திலாவது உறக்கம் கலைய வேண்டும். ப்ரானிக் ஹீலிங் போலவே எத்தனையோ மருத்துவ முறைகள் உலகெங்கிலும் பல அரசுகளால் அங்கீகரிக்கப்பட்டு மக்களுக்குப் பயனளிப்பவையாக இருக்கின்றன. சீனாவில் அக்குபங்சர் வைத்தியமே பிரதானமானது என்பதைப் போலவே இந்தியாவிலும்கூட கேரளாவில் இப்போதும் ஆயுர்வேதத்திற்கு நல்ல செல்வாக்கு இருக்கிறது என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது.

ஏன் இதுமாதிரி சாமியார்கள் இம்மாதிரி நடந்துகொள்கிறார்கள் என்பதன் பின்னணியில் இந்தப் பார்வையும் முக்கியமானது என்பதே எனது பார்வை. ஆங்கில மருத்துவத்துக்கான அங்கீகாரத்தை ஒரு தலைமுறைக்கு ரத்து செய்து பாருங்கள், எத்தனை எம்பிபியெஸ்கள் சாமியார்களாக ஆகிறார்கள் என்பது தெரியும்!

வாழும் மனிதர்களை அவர்கள் நோயைப் போக்குகிறார்கள், ஆன்மிகத் தெளிவு வழங்குகிறார்கள், ஆத்ம அமைதியை அருளுகிறார்கள், சம்பத்தைப் பெருக்கித் தருகிறார்கள் என்கிற காரணங்களுக்காக தெய்வங்களாகப் போற்றுகிற சமூகம் இருக்கிறவரை இந்தக் குழப்பங்கள் எல்லாம் தவிர்க்க இயலாதவையே!

Read more...

விளக்கணைச்ச நேரத்திலே…

புவி வெப்பமாகவும் கூடாது, குளிர்ந்துவிடவும்கூடாது என்றால் நம்மால் என்னதான் செய்ய முடியும்? நல்ல லட்டு மாதிரியான பீரியடையெல்லாம் நம் முன்னோர்கள் வாழ்ந்துவிட்டுப் போய்விட்டார்கள். அவர்களைப் பொருத்தவரைக்கும் எந்தக் குழப்பமுமில்லாமல் பகலென்றால் வெளிச்சமாகவும் இரவென்றால் இருட்டாகவும் இருந்து வந்தது. நிம்மதியாக இருந்தார்கள். உன் செய்கையால் பூமியின் ஆதாரக் கட்டமைப்பே பாதிக்கப்படுகிறது என்று ஒரு குரங்கையோ முதலையையோ எப்படி குற்றஞ்சாட்ட முடியாதோ அதே மாதிரிதான் இந்த முன்னோர்களையும் நம்மால் கடிந்துகொள்ள இயலாது. ஏனென்றால் அவர்களுக்கு இப்படியெல்லாம் சில பிரச்சனைகள் வரப்போகின்றன என்பது தெரியாது.

இவர்களில், கிடைத்த பெண்களையெல்லாம் ஆண்களும் கிடைத்த ஆண்களையெல்லாம் பெண்களும் புணர்ந்துகொண்டு, குடும்பம் என்கிற கட்டமைப்புக்குள்கூட வராத நிலையில் இருந்தவர்களைப் பார்த்து இன்னும்கூட நான் பொறாமைப்படுகிறேன். புணர்ச்சி, ஆகாரத் தேட்டம், வேட்டையாடல், விளையாடல் ஆகியவற்றால் உலகம் உயிர்த்திருந்ததே தவிர அழிந்துபடவில்லை.

இந்த அற்புதங்களையெல்லாம் விட்டுவிட்டு பகலில் இருளும் இரவில் வெளிச்சமும் வேண்டும் என்று எப்போது மனிதன் யோசிக்க ஆரம்பித்தானோ அப்போதே முளைத்துவிட்டது பிரச்சனை. மனிதனுக்கல்ல, பூமிக்கு. ஏனென்றால் இயல்பை மீறுவது பூமிக்குப் பிடிக்காது. என் அந்தரங்கத்தை யாராவது தோண்டிப் பார்க்க முனைந்தால் எனக்கே பிடிக்காது என்கிறபோது, அகழ்வாரைத் தாங்கும் நன்னிலம் ஏன் பொங்கியெழக்கூடாது? இதன்வாயிலாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது ஒன்றுதான், நிற்பன, நடப்பன, பறப்பன, ஊர்வன யாவும் நிலத்தன. மனிதகுலம் எனும் கனவில் மிதப்பனதான் நிலத்தைக் கெடுத்தன.

ஒவர் தமிழால் நீங்கள் சோர்வடைந்திருக்கலாம் அல்லது சிலிர்ப்படைந்திருக்கலாம், போரடிக்காமல் விஷயத்துக்கு வருகிறேன், மார்ச் 28 புவி வெப்பமடைவதையெதிர்த்து புத்தியும் ஹ்ருதயமும் உள்ள மனிதர்களைத் திரட்ட உலகளாவிய முனைப்பு செயல்படும் தினம் என்பதாக கடந்த வருடமே ஓர் அறிவிப்பை எதிர்கொண்டேன். அதன்படி அந்த நாளில் இரவு எட்டரை மணியிலிருந்து ஒன்பதரை மணி வரைக்கும் எர்த் அவர் என்பதாக அறிவிக்கப்பட்டு, அந்த நேரத்தில் அத்தியாவசியமல்லாத சுவிட்சுகளை அணைக்கவேண்டும் என்பது கட்டளையல்ல, கோரிக்கை. கடந்த வருடம் கலைஞர் கருணாநிதியின் தலைமையில் தள்ளாடும் அல்லது பட்டையைக் கிளப்பும் தமிழகம் எனும் நிலப்பிரதேசம் அதில் கலந்துகொள்ளவில்லை. ஏனென்றால் இந்தமாதிரி மின்னணைப்பு வைபவம் எல்லாம், மின்சாரத்தை ஒருபோதும் அணைக்காத போதமுள்ள தேசங்களுக்கு மாத்திரமே வெல்லமாக இருக்க முடியுமே தவிர, கலைஞரின் விக்டிமாக விடிந்திருக்கிற ஆற்காடார் தலைமையில் வீக்கான வோல்ட்டேஜில் மின்வெட்டும் நள்ளிரவு கும்மிருட்டும் துள்ளிவிளையாடும் தமிழ்த்தேயம் போன்ற ஏரியாக்களில் வெறும் விளையாட்டாகவே ஏற்றுக்கொள்ளப்பட முடியும்.

ஆனாலும் ஆஸ்திரேலியக் கண்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இயக்கம் எப்படியோ கடலில் விழுந்து நீந்தியோ, ஃபேக்ஸ் மெஷினில் புகுந்து புறப்பட்டோ, ஊடகத்தால்தான் ஊடுருவியோ இங்கே வரைக்கும் வந்துவிட்டது. போன வருஷமே இந்தியத் துணைக்கண்டத்தின் வட இந்திய நகரங்களில் இந்த அனுசரிப்பு நிகழவே செய்தது. இந்த வருடம் அதைத் தமிழ் கூறும் நல்லுலகும் ஏற்றுக்கொண்டுவிட்டது. ஆக, ஒவ்வொரு இந்தியனின் தலையிலும் சுமத்தப்படும் உலக வங்கிக் கடன் போல வருடம் ஒருநாள் ஒரு மணிநேரம் அவர்களாக நிறுத்தாமல் நாமாக மின்சாரத்தை நிறுத்த ஒரு நல்வாய்ப்பு நமக்கு வழங்கப்பட்டது. இது கிட்டத்தட்ட ஈபி எனப்படும் எலக்ட்ரிசிடி போர்டு இயக்குனர் பதவிக்கு ஒப்பானது என்பதனால் இதை நாம் அனுசரிக்க வேண்டிய கட்டாயத்தை நாமும் உணர்ந்துகொண்டோம்.

அவர்கள் குறிப்பிட்டிருந்த நேரத்தில் கலைஞர் கருணாநிதியின் வீட்டில் இருள் சூழ்ந்திருந்ததை அடுத்தநாள் நாம் ஊடகம் வாயிலாகப் பார்த்தோம். ஒருமணிநேரம் கவிதை அல்லது கழகக் கண்மணிகளுக்கான கடிதம் எழுத முடியாத நிலைமையில் அவர் தள்ளப்பட்டது தமிழுக்கு நல்லது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களும், அது தமிழே ஸ்தம்பித்த ஒரு மணிநேரம் என்பதாக அனைத்திந்திய திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர்களும் கருதும்படியாக ஆகிவிட்டது. அதாவது புவிக்கு ஒன்றேல் இரட்டை லாபம், அன்றேல் இரட்டை நட்டம்.

அவர் வீடு மாத்திரமல்ல, பாராளுமன்றம், இந்தியா கேட் என்று தொடங்கி நாடெங்கும் பல்வேறு இடங்களில் விளக்ணைந்ததை விமரிசையாக ஊடகங்கள் காட்டின. இதனால் நாம்தான் விளக்கணைக்காமல் விட்டுவிட்டோமோ என்று பலரும் வருந்தநேரும் என்பதாக அவர்கள் எண்ணமிட்டிருக்கலாம். அடுத்த வருடம் இதற்கான பர்ஸன்டேஜை உயர்த்த இந்த உள்மனக் கிலேசம் உதவக்கூடும் என்பதும் உண்மையாக இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி எனக்கு அக்கறையில்லை. ஏனென்றால் அயாம் நாட் கில்ட்டி.

அதாகப்பட்டது, ஒழுங்கு மரியாதையாக அந்த நேரத்தில் விளக்கணைத்த புவி விரும்பிகளில் நானும் ஒருவன். சாதாரணமாக இந்தமாதிரி விஷயங்கள் எல்லாம் கட்டாயமாக்கப்பட்டால் அதை எதிர்க்கிற முனைப்பில் திரிகிற பழக்கம் உள்ளவன் என்பதால், அரசாங்கம் கட்டளையிடாமல் கோரிக்கை வைக்கும்போது அதை ஒழுகவேண்டியது கடமை என்பதாக நான் அதை அனுசரித்தேனா, உண்மையிலேயே உலகம் வெப்பமயமாவதை என்னாலான அளவு தடுக்கப்போகிற முனைப்பை உடையவனா நான் என்பதையெல்லாம் நீங்கள்தான் சொல்ல வேண்டும். நான் நடந்ததை மட்டும் சொல்கிறேன். (உதாரணமாக இதற்கு அடுத்தநாள் மஹாவீர் ஜெயந்தி என்பதால் புலாலும் மதுவும் விற்பதற்கு தடை இருந்த காரணத்தால் கனஜரூராய்க் கிளம்பிப்போய் ரகசியமாக இரண்டையும் வாங்கி வந்து சமைத்து உண்ணவும் கலந்து அருந்தவுமாய் இருந்தவன்தான் இதை எழுதிக்கொண்டிருப்பவன் என்பதை நீங்கள் மனதிற்கொள்ளலாம்).

சாதாரணமாக இரவு ஒன்பதரையிலிருந்து பத்துக்குள் வாசல் விளக்கை அணைத்துவிட்டு கதவுகளைப் பூட்டுவது வழக்கம் என்பதனால் இந்த எட்டரை டு ஒன்பதரை வைபவத்தை முன்னிட்டு எட்டு இருபதுக்கே அதைச் செய்து விட்டு இரண்டு மெழுகுவர்த்திகளையும் ஹாலில் ஏற்றி வைத்துக்கொள்வது என்பதாக தீர்மானித்திருந்தேன். அதாவது அநாவசியம் என்பதாக தோன்றுகிற அத்தனை சுவிட்சுகளையும் அணைப்பது நோக்கம். அப்படியானால் முதலில் அணைக்க வேண்டியது டீவி. அடுத்தது கம்ப்யூட்டர், மூன்றாவது விளக்குகள். தேவைப்பட்டால் ஃபிரிட்ஜ். வெய்யில் காலம் என்பதால் கடைசியாகத்தான் ஃபேன். இந்த ஆர்டரில் ஒழுங்காக ஒவ்வொன்றாக செய்துகொண்டு வந்தேன். படுக்கையறையில் ஒரு மணிநேரம் முன்பாகவே ஏஸியை ஓடவிட்டுவிட்டு இந்த ஒரு மணிநேரத்தில் அணைத்துவிட்டால் அறை கூலாக இருக்குமே என்று ஓடிய குறுக்கு புத்தியை செருப்பால் அடித்துவிட்டு சரியாக எட்டரைக்கு ஃப்ரிட்ஜ் வரைக்கும் அணைக்கப்பட்டுவிட்டதா என்பதைப் பார்த்துவிட்டு ஒழுங்காக ஹாலில் வந்து சம்பிரதாயமாக தரையில் உட்கார்ந்துகொண்டேன்.

மெழுகுவர்த்தி வெளிச்சமும் அவை அணையாத அளவுக்கு மெதுவாகச் சுழலவிட்ட ஒரே ஒரு ஃபேனும் மாத்திரம். சென்னைக்கு வந்து முதல் கோடை என்பதனால் ஃபேனை அணைக்க மனம் வரவில்லை. அதோடு குடிக்கும்போது ஃபேன்கூட இல்லையானால் வியர்வை பெருக்கெடுக்க ஆரம்பித்துவிடும் என்பதாலும் அதைத் தவிர்க்க இயலவில்லை.

சரியாக சனிக்கிழமை ராத்திரி பார்த்து இப்படியொரு கோரிக்கை வைக்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது பாருங்களேன்… மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் குடித்து வெகுநாட்கள் ஆகின்ற காரணத்தால் உண்மையில் ரஸமாகவே இருந்தது. ஆஸ்திரேலியர்களுக்கு இதற்காகவே ஒரு பாராட்டுப் பத்திரம் வாசிக்கலாம். அதோடு தனியாகக் குடிப்பது யாரோடும் பகை நேராமல் இருக்க நல்ல உபாயம் என்பதாலும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில், மெல்லிய ஃபேன் காற்றில் மெடிடேஷன் போல ஒரு குடிடேஷன் வைபவம் பிரமாதமாக நடந்தேறியது.

இடையில் காற்று போதாமல் கொஞ்சம் வாங்கலாமே என்று பின் வாசலில் போய் நின்றபோதுதான் எங்கள் ஏரியாவிலேயே இந்த வைபவத்தை அனுசரித்த ஒரே விஐபி நான்தான் என்பது தெரிந்தது. சரி, எல்லோரும் என்னைப்போல தனியாகவா இருக்கிறார்கள்? வீட்டில் ஒருத்தருக்கொருத்தர் மூஞ்சியைப் பார்த்துக்கொள்ள சகிக்காமல்தானே டீவியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அதையும் அணை என்றால் எப்படி? உண்மையில் இம்மாதிரி விளக்ணைக்க நேரும்போது வீட்டிலுள்ள சக மனிதர்களோடு பேச ஆரம்பிக்க முடிகிறது என்பதையே பலரும் வலியுறுத்திவருகையில் தனியர்களைவிடவும் குடும்பங்களே இதை கண்டிப்பாக அனுசரிக்கவேண்டிய அவசியம் கோரப்படவே செய்கிறது. யார் காதில் விழுகிறது…

இரண்டொரு நண்பர்களுக்கு ஃபோன் செய்து பார்த்தபோதும் ஐபியெல் பார்த்துக்கொண்டோ சீரியல் பார்த்துக்கொண்டே இருந்தார்கள் என்பதுதான் தெரியவந்தது. அவர்கள் என்னிடம் கேட்டதெல்லாம் இப்படியொரு அறிவிப்பு வந்ததா? அது எப்போது வந்தது? என்பதுதான். இன்னொருவர் கேட்டார், ஆமாம் எங்கோ படித்தேன். அது என்றைக்கு? என்று. ஒன்றேல் இந்த எட்டரை டு ஒன்பதரை விஷயம் ஊடகங்களால் சரிவர பரப்பப்படவில்லை (அதாவது நமீதா போன்ற நவநாயகியர் கையில் தீப்பந்தத்தை ஏந்தியவாறு குதித்து குதித்து ஓடிவந்து மெúஸஜ் சொல்லவில்லை). அன்றேல் அதைக் கேட்டதாய்க் காட்டிக்கொள்வதையே அசிங்கமான கனவு கண்டதைப்போல தங்களுக்குள் மறைத்துக்கொள்வதை பலரும் விரும்பியிருக்க வேண்டும்.

இவற்றில் எது உண்மை என்று உங்களைக் கேட்டால் உங்கள் உள்மனம் வெறொன்றை முன்வைக்கக்கூடும். புவி வெப்பமயமாதலைக் குறித்த விழிப்புணர்வோ அக்கறையோ எனக்குத் தேவையில்லை என்பதே அது. ஏனென்றால் உங்களைப் பொருத்தவரைக்கும் அதெல்லாம் ஆங்கிலப் படங்களுக்கு திரைக்கதை எழுதுபவர்களின் தந்திரம் மாத்திரமே.

சரியாக ஒன்பதரைக்கு அவசியமான சுவிட்சுகளைப் போட்டுவிட்டு, ஆகாரத்தைப் பிட்டுப் போட்டுக்கொண்டு கொஞ்சநேரம் எச்பீயோவைப் பார்ப்பதற்குள் சரக்கு உறக்கத்திற்கு மணியடித்துவிட்டதால் டீவியையும் விளக்குகளையும் அணைத்துவிட்டு இன்றைக்கு நான்கூட மின்சாரத்தை சேமித்து இந்த பூமிக்கு என்னாலான நல்லுதவியை ஆற்றியிருக்கிறேன் என்கிற சந்தோஷத்தோடு படுக்கையறைக்குப் போனேன்.

இதோடு இந்தக் கட்டுரையை முடிக்க நேர்ந்திருந்தால் நன்றாகத்தான் இருந்திருக்கும். என்ன செய்வது, அடுத்த நாள் காலையில்தானே ஹாலில் சுழலவிட்டிருந்த ஃபேனை மப்பில் அணைக்க மறந்திருந்தது தெரிந்து தொலைத்தது.

Read more...

கூடாரத்தில் ஒரு ஆங்கிலேய அழகி


 
ஜீலு நாட்டில் மாவீரன் ஒருவன் இருந்தான். அவன் அந்த நாட்டு மன்னனிடம் சென்று அவனது மகளைத் தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டான்.


" நான் இடுகின்ற மூன்று கட்டளைகளை அணுவளவும் பிசகாது எவன் ஒருவன் செய்கிறானோ, அவனுக்கே என் மகளைத் திருமணம் செய்து தருவேன்" என்று அந்த மன்னன் அவனுக்கு பதில் அளித்தான்.

" அந்த முன்று கட்டாளைகள் என்னென? சொல்லுங்கள் மன்னவா! உடனே அவற்றை நிறைவேற்றி வைக்கிறேன்!" என்றான் அந்த மாவீரன்.

" நான் முன்று கூடாரங்களை ஏற்ப்டுத்தி வைத்திருக்கிறேன், முதல் கூடாரத்தில் பெரியதொரு சாராயப் பீப்பாய் இருக்கிறது. அதில் உள்ள சாராயம் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட வேண்டும் "

" இந்தக் காரியத்தை முடித்த கையோடு உடனே இரண்டாவது கூடாரத்திற்க்குச் செல்ல வேண்டும் அங்கே பல்வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பைத்தியம் பிடித்த மனிதக் குரங்கு ஒன்று இருக்கும். ஏழு அடி உயரம் உள்ள அந்த மனிதக் குரங்கிற்க்கு தொல்லை தரும் பல் எது என்பதைக் கண்டுபிடித்து , அந்த பல்லை வெறுமனெ கையினாலேயே பிடுங்கி எறிய வேண்டும்."

இந்த வேலை முடிந்தவுடன் சிறிதும் தாமதியாது மூன்றாவது கூடாரத்திற்க்கு செல்லவேண்டும். அங்கே ஒரு ஆங்கிலேயப் பெண் இருப்பாள். எந்த ஒரு ஆண்மனும் அவளை உடலுறவில் முழுதும் திருப்தி செய்ய முடியாதபடி ஒரு தனிப் பயிற்சி பெற்றவளாக இருப்பாள். அவளோடு உடலுறவு கோண்டு அவளை முழுவதும் திருப்தி செய்ய வேண்டும் " என்றான் மன்னன்

" இது எனக்கு சாதாரணம் இப்போதே இதை செய்கிறேன்" என கூறிவிட்டு அந்த மாவீரன் முதல் கூடாரத்தினுள் நுழைந்தான். ஒரே மூச்சில் பீப்பாய் சாராயத்தையும் காலி செய்தான்.

பின்னர் பைத்தியம் பிடித்த மனிதக் குரங்கு இருக்கும் கூடாரத்தினுள் தடுமாறியபடி நுழைந்தான்.

அங்கே அவனுக்கும் அந்தக் மனிதக் குரங்குக்கும் ஒரு பயங்கரமான் சண்டை நடந்து. அந்த சண்டையில் அந்த கூடாரமே ஆட்டம் கண்டது. வேதனைக் கூக்குரல் விண்ணைப் பிளந்துது.அந்தக் மனிதக் குரங்கின் உடம்பின் மேலுள்ள முடிக்கற்றைகள் பறந்து வந்து வெளியே விழுந்தன.மனிதக் காது ஒன்றுகூட வெளியில் வந்து விழுந்து.
இந்த கூச்சலும் கூக்குரலும் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. சற்று அமைதி, பின் அந்தக் கூடாரத்திலிருந்து மாவீரன் தவழ்ந்து கொண்டே வெளியே வந்தான்.

தள்ளாடிக் கொண்டே எழுந்து நின்று அந்த மன்னனைப் பார்த்துக் கேட்டான்.

" சரி அரசே! இப்போது பல்வலியால் அவதிப்படும் அந்த ஆங்கிலேயப் பெண்மனி இருக்கும் இடத்தைக் காட்டுகிறீர்களா ?"
 
-ஓஷோ

Read more...

நானும் ஒரு விபச்சாரி

 
ஒரு முறை நடைபாதையில் லைசென்ஸ் இல்லாமல் நடை பாதையில் வியாபாரம் செய்ததற்க்காக முல்லா மாட்டிக்கொண்டார்-அவ்ர் அந்த ஊருக்கு புதிது அதனால் அங்கு நடைபாதையில் வியாபாரம் செய்ய உரிமம் தேவை என்பது தெரியாது.

அவர் நீதி மன்றத்திற்க்கு அழைத்து வரப்பட்டார்- அங்கு நீதிபதி முன் மூன்று பெண்களும் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் உரிமம் இல்லாமல் விபச்சாரம் செய்ததல் கைது செய்து செய்யப்பட்டிருந்தனர். அந்த ஊரில் விபசாரம் செய்யவும் உரிமம் வழங்கப்படுகிறது-அவர்கள் அத்தகைய உரிமம் இல்லாததால் மாட்டிக்கொண்டனர்.

நீதிபதி முதல் பெண்ணிடம் கேட்டார் " நீ யார் ,என்ன செய்து கொண்டிருந்தாய் ? இந்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறாயா ?"

முதல் பெண் " நான் ஒரு மாடல் , என்னை தவறாக கைது செய்துவிட்டனர்" என்று பொய் சொன்னாள்.

நிதிபதி " 30 நாள் கடும் காவல் தண்டனை " என்று சொல்லிவிட்டு இரண்டாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

இரண்டாம் பெண் " நான் ஒரு நடிகை! இதற்க்கும் சிறிதளவும் சம்மந்தமில்லை " எனச் சொன்னாள் ( பொய்தான் ) நீதிபதி " உனக்கு 60 நாள் கடும் காவல் தண்டனை " என்று சொல்லிவிட்டு முன்றாம் பெண்ணை பார்த்து இதே கேள்விகளை கேட்டார்

முன்றாம் பெண் " ஐயா ! நான் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! " எனச்சொன்னாள்

இதைக் கேட்ட நீதிபதி " நான் உன்னை பாராட்டுகிறேன் தண்டனை கிடைக்கும் எனத்தெரிந்தும் உண்மையை சொன்னதற்க்காக! நான் உண்னை விடுதலை செய்கிறேன் அதுமட்டுமல்ல உனக்கு உரிமம் வழங்கவும் உத்திரவிடுகிறேன்! " எனதீர்ப்பு கூறினார்

இப்போது முல்லாவின் முறை, நீதிபதி தனது வழக்கமான கேள்விகளை முல்லாவிடம் கேட்டார் அதற்க்கு முல்லா" ஐயா ! நானும் ஒரு விபச்சாரி , உரிமம் பற்றி எனக்கு தெரியாது , எனக்கு வேறு தொழிலும் தெரியாது ! " எனச்சொன்னார்

தழுவல் : ஓஷோ

Read more...

என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன்...?

 

முல்லா தான் மிகவும் குண்டாக இருப்பதை நினைத்து மிகுந்த வருத்தத்தில் இருந்தார், அப்போது நாளிதழில் வந்த ஒரு (கீழ்க்கண்ட) விளம்பரம் கண்ணை கவர்ந்தது

மிகவும் கவர்ச்சிகரமான முறையில் உடம்பு இளைக்க ஒரு வாய்ப்பு !

1)
உடல் இளைக்க (சாதாரணம்) – Rs 1,000/- ஒரு மணி நேரம் ( 2 முதல் 5 கிலோ வரை )
2)
சூப்பர் ட்ரிம்மர் - Rs 2,000/- இரண்டு மணி நேரம் ( 6 முதல் 10 கிலோ வரை )
3)
ஹெவி ட்ரிம்மர் - Rs 3,000/- மூன்று மணி நேரம்( 11 முதல் 15 கிலோ வரை )
4)
அல்டிமேட் ட்ரிம்மர் - Rs 10,000/- கால வரையரை இல்லை ( எடை வரையரை இல்லை )

முன்பதிவிற்கு முந்துங்கள்...

முல்லா இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் அதை முயற்சி செய்து பார்த்துவிடுவது என முடிவெடுத்தார். ஆனாலும், சாதாரண முறையில் முதலில் பரீட்சிக்க விரும்பி அதற்க்கான பணத்தை கட்டினார். அவர் ஒரு காலியான அறையில் விடப்பட்டார். அந்த அறை பதினாறுக்கு பதினாறு என்ற அளவில் இருந்தது. அதன் மூலையில் ஒரு பெண் அமர்ந்திருந்தார் அவளுடைய கையில் ஒரு அட்டை அதில் " ஒரு மணி நேரத்திற்க்குள் என்னை துரத்திப் பிடித்தால் என்னுடன் ஜாலியாக இருக்கலாம்" என்று எழுதியிருந்தது, முல்லா அந்த பெண்னை துரத்த ஆரம்பித்தார்–அவருக்கு எல்லாம் நல்ல படியாகவே முடிந்தது–அவர் துரத்திய துரத்தலில் அவருடைய எடையும் கனிசமாக குறைந்தது..

முழு திருப்தியுடன் அதற்க்கு அடுத்த முறையை பரிச்சிக்க விரும்பினார் இந்த முறையில் கொஞ்சம் வித்தியாசம். அறையின் அளவு நாற்பதுக்கு நாற்பது, சாதாரண முறையைவிட நல்ல அழகான பெண், கால அவகாசம் இரண்டு மணி நேரம் அவ்வளவுதான், மற்றபடி, முறை ஒன்றுதான். இதிலும் முல்லாவிற்கு முழுதிருப்தி.

மிகவும் மகிழ்ச்சியுடன் அடுத்த முறையை தேர்ந்தெடுத்தார் இதிலும் கொஞ்சம் வித்தியாசம். அறையின் அளவு எழுபத்தைந்துக்கு எழுபத்தைந்து, மிக மிக அழகான பெண், கால அவகாசம் மூன்று மணி நேரம். முல்லா கணிசமாக எடை குறைந்திருந்தார். அவருக்கு, எல்லா முறைகளிலும் தான் சிறப்பாக செய்ததை எண்ணி அளவில்லா ஆனந்தம், கடைசியாக? அல்டிமேட் ட்ரிம்மர் முறையிலும் கலந்து கொள்வது என்று முடிவெடுத்தார், அதற்க்கான பணத்தையும் கட்டினார்.

வரவேர்ப்பாளர் அவரிடம் பதினாறாவது மாடிக்கு நடந்து செல்லும் படி சொன்னார், முல்லாவும் தான் அடையப்போகும் சந்தோஷத்தை எண்ணியவரே கஷ்டப்பட்டு பதினாறாவது மாடியை அடைந்தார். அங்கு அவர் நார்ப்பத்திரண்டாவது மாடிக்கு பதினைந்து நிமிடத்திற்குள் ஓடி வந்து சேர வேண்டும். அப்படி வந்தால் தான் பயிற்சி உண்டு என தெரிவிக்கப்பட்டது, முல்லாவிற்கு வேறு வழியும் இல்லை, தான் காணப்போகும் மிக மிக அற்புதமான அனுபவத்தை நினைத்தவாறு உயிரைக் கொடுத்து ஓடி மாடியை 13 நிமிடத்தில் அடைந்தார். அது மிகப்பரந்த ஒரு மொட்டை மாடி அதன் அளவு சுமார் 500X500 அடி பரப்பளவு இருக்கும், அதன் மூலையில் ஒரு பெரிய அறை அவ்வளவுதான். அவர் மொட்டை மாடியை அடைந்ததும் அவருக்குப்பின் கதவு மூடப்பட்டது, முல்லா மூச்சு வாங்கியவாரே அந்த அறையை நோக்கி நடந்தார் அங்கே! " நான் உன்னை துரத்திப் பிடித்தால், என் ஆசை தீர உன்னை அனுபவிப்பேன் " என்ற வாசகம் எழுதிய அட்டையுடன் அமைதியாக ஒரு பெரிய மனிதக்குரங்கு அமர்ந்திருந்தது.

-
ஓஷோ

Read more...

நான் ஒரு கெட்ட பெண்மணி

 
ஒரு பெண் ஒரு கிளியை விலைக்கு வாங்கினாள். ஆனால் பிறகு மிகவும் கவலைப்பட்டாள் . அதற்க்காக அவள் நல்ல விலை கொடுத்திருந்தாள். கிளி அழகாக இருந்தது. ஆனால் அது பேசும் ஒரு விஷயம் ஆபத்தாக இருந்தது.

அடிக்கடி அந்த கிளி உரக்க, " நான் ஒரு கெட்ட பெண்மணி" என்று கூறியது. இதில் ஏதோ விஷயம் இருக்கிறது . அந்தப் பெண் தனியாக வாழ்பவள். மிகவும் மதப்பற்றுள்ளவள். இல்லை யென்றால் ஏன் தனியாக வாழவேண்டும்? அவள் மிகவும் கடுகடுப்பான பெண்.

இந்த கிளி மீண்டும் , மீண்டும் ,"நான் மிகவும் கொடுமைக்காரப் பெண்" என்று கூறியது.

அவள் பூசாரியிடம் சென்று " இது மிகவும் மோசமானது. நான் என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறேன். கிளி மிகவும் அழகாக இருக்கிறது . எல்லா விஷயங்களும் நன்றாக இருக்கின்றன, இது ஒன்றைத் தவிர" என்று கூறினாள்.

பூசாரி சொன்னார் :

" கவலைப்படாதே. என்னிடம் இரண்டு பக்தியுள்ள கிளிகள் இருக்கின்றன. ஒன்று வழிபாடு செய்யும் ; மற்றொன்று மணியடிக்கும் . நீ உன் கிளியைக் கொண்டு வா, இந்த கிளிகளுடன் கொஞ்ச நாள் உன் கிளியை விட்டுச் செல். நல்ல நட்பு எப்போதும் உதவி செய்யும். பின்னர் உன் கிளியை எடுத்துச் செல்லாம் ! "

அந்த பெண்ணுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது. அவள் ஒப்புக் கொண்டு கிளியை எடுத்து வந்தாள் . பூசாரி தன் கிளிகளுக்கு அந்த கிளியை அறிமுகப் படுத்தி வைத்தார். ஆனால் அவர்கள் எதுவும் பேசும்முன் அந்தக் கிளி கூறியது . " நான் மிகவும் கொடுமைக்காரப் பெண் ."

பூசாரியும் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார்.

அப்போது வழிபாடு செய்து கொண்டிருந்த கிளி வழிபாட்டை நிறுத்திவிட்டு அடுத்த கிளியிடம் ," முட்டாளே ! இன்னும் ஏன் மணியாட்டிக் கொண்டிருக்கிறாய் ? நம் பிராத்தனைகள் நிறைவேறி விட்டன " என்று கூறியது . அவை ஒரு பெண்னுக்காகப் பிராத்தனை செய்து வந்திருந்தன

ஓஷோ கூறுகிறார் :

" யாராவது பிரார்த்தனை செய்வதைப் பார்த்தால் ஏதோ தவறு நடக்கிறது என்று உண்மையில் சந்தேகப்படு. அவர்கள் பண்த்துக்காக, பெண்ணுக்காக, மகிழ்ச்சிக்காக பிரார்த்தனை செய்கிறார்கள். உண்மையில் மகிழ்ச்சியான மனிதன் பிரார்த்தனை செய்வதில்லை. மகிழ்ச்சிதான் அவன் வழிபாடு , அதைவிட உயர்ந்த சிறந்த வழிபாடு இருக்க முடியாது, "

-ஓஷோ வின் குட்டி கதைகள்

Read more...

இந்தியா வந்த “ஆரிய இனம்”

காலத்துள் புதைந்து கிடைக்கும் உறவுகளும் உண்மைகளும் (1)

 

ஆரிய இனம்

"வானியல் நோக்கில் வள்ளுவராண்டு" என்ற தலைப்பில் தென்மொழி 37-10 இல் வெளிவந்திருக்கும் கட்டுரை படித்தேன். கட்டுரையாளர் தான் திறங்கூறியிருக்கும் இந்திய வரலாற்றில் புராணங்கள், இலக்கியங்கள், வானியல் என்ற நூலையோ குறிப்பிட்ட "தைப்பொங்கலும் தமிழர்களின் வடக்கு நோக்கி நகர்வும்" என்ற கட்டுரையையோ கவனத்துடன் படிக்கவில்லை என்று புரிகிறது.

 

தமிழர்கள், இன்னும் தெளிவாக, குமரிக்கண்ட மக்கள் வானியலை மட்டுமல்ல, மனித நாகரீகத்தின் அடிப்படைத் துறைகள் அனைத்தையும், அளந்து, அறிந்து, தொகுத்து, வகுத்து முழுமைப்படுத்தியவர்கள். ஆனால் அவர்களது பதிவுகள் தமிழ் மொழியில் இன்றி மறைமொழி, சமற்கிருதம் போன்றவற்றில் உள்ளமையால் அவற்றை நாம் கவனிக்கவில்லை.

 

இற்றை ஐரோப்பிய நாகரீக மீட்சியின் போது இந்தியா வந்த ஐரோப்பியர் முதலில் சமற்கிருத மொழியைத் தனித்து ஆய்ந்து "ஆரிய இனம்" என்ற தவறான கோட்பாட்டை உருவாக்கினர். இதில் செருமானியரின் பங்கு பெரிது. நாடு பிடிக்கும் போட்டியில் பிரான்சை வெல்ல அதற்கெதிராக செருமனியைத் தூண்டி விட்டு ஐரோப்பாவினுள் அதன் செயற்பாடுகளைக் குறுக்கி அதற்கு குடியேற்ற நாடுகள் எதுவுமே இல்லாமலாக்கிய பிரிட்டனை பழிவாங்க, தாங்களே "தூய" ஆரியர்கள்; தங்களுக்கே உலகை ஆளும் தகுதி உண்டு என்று களத்தில் இறங்கி இரண்டு உலகப் போர்களைத் தொடங்கிவைத்துத் தன்னை ஏமாற்றி பிரிட்டன் பிடித்த நாடுகளை இழக்க வைத்த செருமனியும் சிறந்த நாகரீக வளர்ச்சி பெற்றிருந்த "திராவிடர்களை" (இதுவும் ஒரு கற்பனை இனம்) வென்றவர்கள் என்ற கற்பனை ஊட்டிய உளவியல் ஊக்கத்தால் பிற ஐரோப்பிய மக்களும் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பூசலில் பார்ப்பனரல்லாதாரின் மூதாதையினர் என்று தவறாகக் கற்பிக்கப்பட்ட"திராவிடர்களை" வென்றவர்கள் என்ற மதர்ப்பை ஊட்டுவதால் பார்ப்பனர்களும் தத்தமக்குக் கீழுள்ள சாதிகள் மீது தாம் கட்டவிழ்த்து விடும் சாதியக் கொடுமைகளுக்கு "ஆரியர்களான" பார்ப்பனர்களே காரணம் என்று திசைதிருப்ப முடிவதால் பார்ப்பனரல்லாதோரும் என்று இந்தியாவிலும் உலகெங்கிலும் அரசியல் நோக்கங்களுக்காக இந்தப் போலிக் கோட்பாடு வரலாற்றியல் – குமுகியல் அடிப்படை அணுகலில் முதலிடம் பெற்று விளங்குகிறது.

 

"ஆரிய இனம்" இல்லை என்றால் அவர்களது தாய்மொழி என்று இனங்காணப்பட்ட மறைமொழியும் சமற்கிருதமும் எவருடையவை என்ற கேள்வியும் அதனுடனேயே எழுகிறது. உண்மையில் இந்த மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டவர் யார் என்ற கேள்விக்கு விடையின்றி நின்ற வெற்றிடம் தான் அதை நிரப்புவதற்கென்று ஒரு போலி இனம் உருவாகக் காரணமாக இருந்தது. இன்று அதே கேள்வி விடைகேட்டு நம் முன் எழுந்து நிற்கிறது.

 

தமிழ் ஓர் இயன்மொழி என்கிறோம். தமிழ் இந்த வகைப்பாட்டினுள் வரலாம். ஆனால் அம்மொழியைக் கையாண்ட மக்களின் தலையீடு, அதாவது ஒழங்குபடுத்தல், அதாவது செயற்கைக் கூறு அதில் சிறிதும் இல்லையா? எந்தவொரு மொழிக்கும் என்று இலக்கணம் வகுக்கப்படுகிறதோ அன்றே அம்மொழியில் செயற்கைக் கூறு புகுந்து விடுகிறது.

மொழி ஒரு கருத்தறி கருவி என்கிறார்கள். கருத்தை அறிவிப்பதிலும் அரசியல் இருக்கிறது. உலக வரலாற்றில் மொழி பற்றிய ஒரு பொது நடைமுறை, பெரும்பாலான நேர்வுகளில், உண்மையான மக்களாட்சி மரபுகள் வேர்கொள்ளாத குமுகங்களில் வழிபாடும் ஆட்சியும் மக்களுக்குப் புரியாத மொழிகளில் நடைபெறுவதாகும்.

 

ஐரோப்பாவில் ஒரு கட்டத்தில் பல்வேறு நாடுகளிலும் சட்டமும் சமய நூல்களும் கிரேக்கம் மற்றும் இலத்தின் மொழிகளில் இருந்தன. காந்தியார் கூட இங்கிலாந்தில் சட்டம் படித்தபோது சட்டத்தை எளிதாகப் புரிந்து கொள்ள இலத்தீனும் கிரேக்கமும் படிக்க தனிப்பயிற்சி மேற்கொண்டதாகக் குறிப்பிடுகிறார். இந்த மொழிசார் அரசியல் குமரிக்கண்டத்திலும் இந்தியாவிலும் தமிழகத்திலும் நிகழ்ந்துள்ளது. தமிழ், மறைமொழி சமற்கிருதம் என்ற மொழிகளின் பிரிவினை, தோற்றம், மாற்றம், வளர்ச்சி, தளர்ச்சி ஆகியவற்றை இந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் தான் புரியும்.

 

இயல்பாக உருவான, ஒரு விரிந்த பரப்பிலுள்ள மக்கள் பேசும் பேச்சு வழக்குகளைத் தொகுத்து முதல் இலக்கணம் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். அது அகத்தியம் ஆக இருக்க வேண்டும்.

மாந்தவியலின் படி முதலில் பூசாரியர் ஆட்சி இருந்தது. அது பெண் பூசாரியர் ஆட்சியாக இருந்தது. அது பின்னர் ஆண் பூசாரியர் ஆட்சியாக மாற்றம் கண்டது.

 

உண்மையான ஏழு மாதர் பட்டியல் கிடைக்கவில்லை சிலப்பதிகாரம் "வழக்குரை காதை"யில் அச்சம் தரும் தோற்றம் கொண்டிருந்த கண்ணகிக்கு "அறுவர்க்கிளைய நங்கை"யை உவமையாக பாண்டியன் நெடுஞ்செழியனிடம் வாயிலோன் கூறுகிறான். இதற்கு "ஏழு மாதரில் இளையவளான பிடாரி" என்று பொருள் கூறப்பட்டுள்ளது.

 

பிடாரி என்ற சொல்லுக்குக் காளி என்று அகரமுதலிகள் பொருள் தருகின்றன. உண்மையில் அவள் நாகர்களின் முதல் தாய். பிடாரன் – பிடாரி. சிலப்பதிகாரமும் அவளை "துளை யெயிற்றுரகக் கச்சுடை முலைச்சி" (துளை கொண்ட பற்களை உடைய நச்சுப் பாம்பை முலைக்கச்சாய் அணிந்தவள்) என்றே "வேட்டுவ வரி"யில் கூறுகிறது.

 

குமரிக் கண்ட மக்கள் எனும் போது உலக மக்கள் அனைவருமே இந்த 7 பெண்களின் வழி வந்தவர்களே. தமிழகத்திலுள்ள பெரும்பாலான சாதி வரலாறுகள் தாங்கள் 7 மாதர்கள் (கன்னியர், தாயர்) வழி வந்தவர்கள் என்று கூறுகின்றன. சில சாதியினர் அல்லது சாதி உட்பிரிவினர் தாங்கள் பார்ப்பனியம் எனும் வெள்ளாளக்கட்டை மேற்கொண்டதின் அடையாளமாக ஏதோவொரு முனிவர் வழிவந்தோராகக் கூறுகின்றனர். மனித இனமே 5 முதல் 10 பெண்களின் வழி வந்தது என்று இன்றைய அறிவியல் கூறுகிறது. குமரிக் கண்டத்திலிருந்து முழுகியதாக இறையனார் அகப்பொருளுரையில் நக்கீரர் பட்டியலிட்டுள்ள நாடுகளும் ஏழேழாக உள்ளமை இன்னோர் சான்று. இவ்வாறு ஒரு மூதாதையரின் வழி வந்த மக்கள் தொகுதியைக் குக்குலம் (Tribe) என்கிறோம். மூலக்குடிகள் தொல்குடியினர் ஆதிவாசிகள் என்ற சொற்களும் பயனில் உள்ளன. ஆனால் இன்று அந்த 7 மாதர்களில் எந்தவொரு தனிமாதரின் நேரடி வழிவந்தவர்களென்று எவராவது உள்ளனரா என்ற அறிவது கடினம்.

 

ஓரணுவுயிரியாகிய அமீபா தொடங்கி உடலளவில் மனிதனாக திரிவாக்கம் பெற்றதற்கு இணையாக குமுக அமைப்பு, செய்தித் தொடர்பு முதலியனவும் முழுமை நோக்கி நடைபோட்டன. செய்தி தொடர்பு வளர்ச்சி தான் மொழி. இந்த வளர்ச்சி நிலைகளில் ஒன்று, ஏழு பெண்களின் வழியினராக தனித்தனி கட்டமைப்புகளோடு மலை முகடு முதல் கடற்கரை மணல் மேடுகள் வரை வாழ்ந்த ஒவ்வொரு குக்குல மக்களுக்கிடையிலும் நிலத்தின் வேறுபாட்டால் ஏற்பட்ட நில எல்லைகள் அடிப்படையிலான வேறுபாடுகள். இந்த வேறுபாடுகள் ஒவ்வொரு நில எல்லைக்கும் உட்பட்ட மக்களிடையிலுள்ள குக்குல வேறுபாடுகளை புறந்தள்ளி அந்தந்த மண்ணின் மைந்தர்களாகத் தொகுத்தன. இந்தப் பணியை அந்தந்த நிலத்துக்குரிய ஏழு குக்குல பூசாரியார் இணைந்து செய்தனர் என்பதற்குத் தடயங்கள் உள்ளன.

Read more...

தொல்காப்பியம்

பாலைத் திணை விடு(வி)க்கும் புதிர்கள் ...1
 
பொருளிலக்கணமும் தொல்காப்பியமும்:
தமிழிலக்கணத்தை எழுத்து, சொல், பொருள் என்று வகைப்படுத்தியிருப்பது தொல் தமிழ் மரபு. இன்று இம்மூன்று இலக்கணங்களும் ஒருசேர அமைந்ததாக நமக்குக் கிடைத்திருக்கும் நூல் தொல்காப்பியம். தொல்காப்பியம், கோட்பாடு வகுத்தல் என்ற வகையில் முதல் நூலல்ல. ஏற்கனவே வழக்கிலிருந்த கோட்பாடுகளின் அடிப்படையில் எழுதப்பட்ட ஒரு நூல்.‌ நூற்பாக்களில் 'என்மனார் புலவர்', 'என்ப' என்ற சொல்லாட்சிகளை இதற்குச் சான்றாகக் கூறலாம். அத்துடன் ஏற்கனவே அடிப்படை இலக்கணம் அறிந்தவர்க்கே சொல்லப்படுவது போலும் தொல்காப்பியம் அமைந்திருக்கிறது. எடுத்துக்காட்டாக,
 
அகர முதல் னகர இறுவாய்
முப்பஃ தென்ப
ஒளகார இறுவாய்ப்
பன்னீரெழுத்தும் உயிரென மொழிப
னகர இறுவாய்ப்
பதினெண் எழுத்தும் மெய்யென மொழிப
 
என்று தான் கூறப்பட்டுள்ளதே தவிர எங்கும் எழுத்துக்கள் வரிசையிட்டுக் காட்டப் படவில்லை. அதேபோல் பொருளதிகாரத்திலும் ஏழுதிணைகளும் வரிசைப்படுத்தப் படவில்லை. இவ்வாறு இலக்கணம் அறிந்தவர்க்கே சொல்லப்படுவதால் நிலவிவரும் இலக்கண மரபில் அக்காலச் சூழ்நிலைக்கேற்ப மாற்றங்களை உள்ளடக்கியதாக இந்நூல் செய்யப்பட்டிருப்பதாக நாம் கருதினோமாயின் அந்த வகையில் புதிய ஒரு கோட்பாட்டைப் படைத்த முதல் நூல் என்றும் கூறலாம்.
 
பொருளிலக்கணம் என்றால் என்ன?
எழுத்தும் சொல்லும் இலக்கியத்தின் வடிவத்தைத் தரும் மூலப்பொருளாகிய ஓசையின் இரு நிலைகள். இந்த மூலப்பொருளைக் கொண்டு அமைக்கப்பட்ட இலக்கியத்தின் உள்ளடக்கம் தான் பொருள். அதாவது பொருள் என்பது இலக்கியத்தின் நுவல் பொருளாகும். இந்த நுவல் பொருளை அன்று நிலவிய பல்வேறு துறை அறவி‌ய‌ல்களின் துணை கொண்டு வரையறுப்பதே பொருளிலக்கணத்தின் நோக்கம். இந்த நம் முடிவுக்குத் திணை என்றால் என்ன என்ற ஆய்வு துணை செய்யும்.
 
திணை என்றால் என்ன?
திணை என்பதற்கு ஒரு வரையறை கூறவேண்டுமாயின் திணைக்குரியனவாகக் கூறப்படும் முப்பொருட் பிரிவுகளையும் நாம் காண வேண்டும். அவை முதல், கரு, உரிப் பொருட்களாகும். முதற்பொருள் என்பது நிலம், பொழுது என்ற இரண்டுமாகும். பொழுது பெரும்பொழுது, சிறுபொழுது என முதலது ஆண்டையும் மற்றது நாளையும் அவ்வாறாகப் பகுக்கப்பட்டிருக்கிறது. இந்த வகைப்பாட்டின் விரிவு‌ தரப்பட்டிருந்தாலும் அவ்வாறு இருவகைப் பிரிவு உண்டு என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. இலக்கணமறிந்தோர்க்கே தொல்காப்பியம் கூறப்பட்டுள்ளது என்பதற்கு இது இன்னொரு சான்று.
 
கருப்பொருள் என்ற தலைப்பின் கீழ் வருபவை:
அவ்வகை பிறவும் என்று கூறப்படுவதால் இந்தப் பட்டியல் இன்னும் விரியும் என்பது புலனாகிறது. அத்துடன் இந்த நீண்ட பட்டியலை அறிந்தோரை நோக்கியே தொல்காப்பியம் செய்யப்பட்டுள்ளது என்பதும் பு‌லனாகிறது. எனவே ஒவ்வொரு திணைக்கும் உரிய கருப்பொருள் எவை எனத் தொல்காப்பியம் குறிப்பிடவில்லை‌.
 
மூன்றாவது, உரிப்பொருள்:
உரிப்பொருள் எனப்படுவது திணைக்கு உரிய பொருளாகும். அவை
அகப்பொருள், புறப்பொருள் என்று இருவகைப்படும்.

ஆனால் தொல்காப்பியத்தில் அகத்திணையியலில் திணையும் உரிப்பொருளும் கூட மேலே குறிப்பிட்ட வரிசையில் கூறப்படவில்லை. புறத்திணையியலில் நடுவிலுள்ள பாலை தனியாக‌க் கூறப்பட்டு எஞ்சியவை இதே வரிசையில் இடம் பெற்றுள்ளன. இவையன்றி இரு திணைகள் முதற்பொருள் கருப்பொருட்களின்றி உள்ளன. அவை, கைக்கிளை - ஒருதலைக்காமம், பாடாண்திணை - வெற்றி பெற்றோனைப் பாடுதல், பெருந்திணை - ஒவ்வாக்காமம், காஞ்சி - வாழ்க்கை நிலையாமை கூறல்.
இந்த ஏழு திணைகளுள்ளும் உள்ள வேறுபாட்டைத் தொகுத்தல் கிடைப்பது
முதல் நான்கில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலப்பிரிவுக்கு அதற்குரிய பொழுதுகளைக் கொண்டதாகவும் அமைந்துள்ளது. இறுதி இரண்டும் எல்லா நிலப் பிரிவுகளுக்கும் எல்லாக் காலங்களுக்கும் உரியன. பாலை மட்டும் நிலமில்லாத ஒன்றாக நிற்கிறது.
தொல்காப்பியத்தில் முழுமை பெற்ற வடிவத்தில் காணப்படும் முதல் நான்‌கு திணைகளையும் அணுகிப் பார்த்தால் திணையின் அடிப்படைப் பண்பு புரியும்.
மக்களின் பருப்பொருட் பின்னணியான நிலத்தையும் காலநி‌லையையும் முதற்பொருளாகவும் அம்முதற்பொருட்களுடன் வினைப்பட்டு அதன் விளைவாக அமைந்த வாழ்க்கைமுறையைக் கருப்பொருளாகவும் குடும்பம் எனும் ஆண் - பெண் உறவாகவும் போர் எனும் அரசியல் உறவாகவும் மக்கள் தமக்குள் கொண்டுள்ள குமுக உறவுகளை உரிப்பொருளாகவும் கொண்டதாக திணை எனும் கருத்துருவம் விளங்குகிறது. இந்தக் கருத்துருவத்தில் முதற் பொருளாகிய நிலத்தை மட்டுமே இழந்து முரண்பட்டு நிற்கிறது பாலை.
 
பாலையின் முரண்பாடு:
பாலைத் திணையிலுள்ள இந்த முரண்பாடு முன்பே கண்டுணரப்பட்டுள்ளது. உலகின் ஒப்பற்ற இலக்கியப் படைப்பாளிகளில் ஒருவரான இளங்கோவடிகள் இந்த முரண்பாட்டை உணர்ந்துள்ளார். இதற்குத் தீர்வாக பாலை நிலத்தை குறிஞ்சி முல்லை என்ற வேறு இரண்டு நிலங்களின் கோடைகாலத் திரிபு நிலையாக் கூறியுள்ளார்.
முல்லையும் குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
பாலை என்பதோர் படிவம் கொள்ளும்
இளங்கோவடிகள் தொல்காப்பியத்தை ஆழ்ந்து படித்து இந்தத் தீர்வைத் தந்துள்ளார். இருந்தாலும் இந்தத் தீர்வு சிக்கலைத் தீர்த்துவிடவில்லை.
முதற்பொருள் கோடைகாலத்தில் பாலை வடிவம் கொள்ளலாம். ஆனால் கருப்பொருட்களும் மக்களும் ஆண்டுதோறும் இந்த மாற்றத்தைப் பெற முடியுமா? உரையாசிரியர்கள் குறிஞ்சி, முல்லை, பாலை என்ற மூன்று நிலங்களுக்கும் கொடுத்துள்ள கருப்பொருள் வரிசையை ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த முரண்பாட்டை நம்மால் நன்றாகப் புரிந்து கொள்ள முடியும்.
 
ஐந்நிலத் தெய்வங்களும் தமிழகமும்:
மேலே தொடருமுன் ஐந்நிலத் தெய்வங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ள தெய்வங்களில் வருணன், இந்திரன் என்ற இரு தெய்வங்களும் ஆரியருக்குரியனவாகக் கருதப்படும் வேதங்களில் இடம் பெற்றுள்ளமையால் ஆரியத் தெய்வங்ககளாகக் கூறப்படுகின்றனவே அப்படியாயின் அவை எவ்வாறு தொல்காப்பியத்தில் இடம்பெற்றன என்ற கேள்வி எழுகிறது. அந்தக் கேள்வியைத் தொடந்து இன்னும் எத்தனையோ கேள்விகள் எழுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் எழுப்பி அவற்றுக்கு விடைதேடிக் கொண்டிருப்பது இங்கு நம் நோக்கமல்ல. இத்தெய்வங்கள் தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் உருவானவையா இல்லையா என்ற கேள்விக்கு மட்டுமே இங்கே விடை தேடுகிறோம்.
 
வருணன், இந்திரன் என்ற தெய்வங்களைப் பற்றிய குறிப்புகள் தொல்லாய்வுகளின் மூலம் ஐரோப்பா, நடு ஆசியா ஆகிய பகுதிகளிலும் வட இந்தியாவில் தொகுக்கப்பட்டவையாகக் கூறப்படும் வேதங்களிலும் காணப்படுகின்றன. ஆனால் எங்கும் தொல்காப்பியத்தில் போல் திட்டவட்டமான நிலப்பகுதியின் நாகரிகத்‌தின் கூறுகளில் ஒன்றாக அவை கூறப்படவில்லை. அப்படியிருக்க அத்தெய்வங்களை வேறு நிலத்து மக்களுக்குரியவை என்பது வரலாறு மற்றும் பண்பாட்டு அறிவியலின் அடிப்படையையே புறக்கணிப்பதாகும். இந்த வகையில் உலகில் பண்பாட்டுக் கூறுகளுடன் தெய்வத்தை இணைத்து எழுதப்பட்டு தமக்குக் கிடைத்துள்ள நூல் தொல்காப்பியம் ஒன்றே. எனவே இந்தத் தெய்வங்கள் தமிழருக்கு மட்டுமே உரியவை.

Read more...

குமரிக் கண்ட ஆய்வில் புதிய பரிமாணங்கள்

தமிழனுக்குக் குமரிக் கண்டம் தாயகம் என்பது குழப்பமின்றி ஏற்கப்பட வேண்டுமென்றால் முதலில் இனக் கோட்பாடு எனும் போலிக் கோட்பாடு கைவிடப்பட வேண்டும். அக்கோட்பாட்டைப் பெற்றெடுத்த மாக்சு முல்லரே அதைக் கைவிட்டுவிட்டார். (வி.ஆர். இராமச்சந்திர தீட்சிதர், origin And spread of Tamils) இன்றுவரை ஆரியர்களுக்குரியதாக ஒரேயோர் அகழ்வாய்வுக் களம்கூடக் கிடைக்கவில்லை.
 
கி.மு. ஆறாம் நூற்றாண்டில் பாரசீகப் பேரரசின்கீழ் சிந்து சமவெளி வந்தது. கி.மு. நான்காம் நூற்றாண்டில் கிரேக்கர்கள் அதனைக் கைப்பற்றினர். கி.பி. இரண்டாம் நூற்றாண்டுவரை அவர்களுடைய அரசியற் செல்வாக்கு அம்மண்டலத்தில் நிலவியது. இந்தக் கட்டத்தில்தான் சமற்கிருத மொழி உருவாகி வளம் பெற்றது. வட இந்தியப் பண்பாடும் உருவம் பெற்றது. இதுதான் சமற்கிருதத்தில் ஐரோப்பிய மொழிகளின் சில சொற்கள் இடம் பெற்ற பின்னணி.
ஆரிய இனக் கோட்பாடு கைவிடப்பட்டால் தமிழர் வரலாற்றிலுள்ள பல குழப்பங்கள் விலகும்.
 
தொல்காப்பியத்திற் கூறப்படும் வருணனும் இந்திரனும் வேதங்களிலும் கூறப்படுகின்றனர். சோழர்களுக்கும் இந்திரனுக்கும் உள்ள நெருக்கமான உறவும் பாண்டியர்களுக்கு அவனிடமுள்ள பகையும் சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ளன. இந்திரனும் வெள்ளையானையும் கரும்பும் இந்தோனேசியத் தீவுகளுடன் தொடர்புடையவை எனக் கூறுவர். அத்தீவுக் கூட்டங்கள் சுமத்ரா(நன்மதுரை -மூலமதுரை), பாலி(தென்பாலி-பாலிமொழி), புருனெய்(பொருனை) என்ற பெயர்களைக் கொண்டுள்ளன. அத்தீவுக் கூட்டங்களில் ஒன்றின் பெயர், இலாமுரி தேசம் என்று இராசேந்திரன் கல்வெட்டொன்று கூறுகிறது. எனவே இலெமுரியாக் கண்டம் என்ற பெயரும் பண்டையிலிருந்தே வருகிறதென்று தெரிகிறது.
 
இச் செய்திகளிலிருந்து குமரிக் கண்டத் தமிழர்களுக்கும் வேதங்களுக்கும் உள்ள உறவு புலப்படும்.
மணிமேகலையின் முன்பிறப்பு பற்றிய கதையில் காந்தார நாட்டில் பூருவ தேயத்தை ஆண்ட அத்திபதி என்ற மன்னனிடம் அவன் நாடு உட்பட நாகநாட்டில் நானூறு யோசனை நிலம் கடலில் முழுகுமென்று கூறப்பட்டது. அவன் விலங்குகளையும் மக்களையும் உடன்கொண்டு வடக்கு நோக்கிச் சென்று அவந்தி நாட்டில் காயங்கரை என்ற ஆற்றின் கரையில் சேர்ந்தான் என்று கூறப்பட்டுள்ளது.
 
சீத்தலைச் சாத்தனார் தமிழ்ப்பற்றை விட சமயப்பற்று மிகுந்தவர் என்பது அவர் நூலை மேலோட்டமாகப் பார்க்கும் போதுகூட வெளிப்படும். எனவே அவரது இந்தக் கூற்றை நாம் நம்பலாம். காந்தாரம் எனும் இன்றைய ஆப்கானிய நகரத்துக்குக் குமரிக் கண்டத்தில் முழுகிய நகர்ப் பெயரே இடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்ல பாண்டவர்களின் குலம் பூருவ இனமாகும். அவந்தி நாட்டிலுள்ள காயங்கரை என்ற ஆறு சிந்து சமவெளியில் ஓடிப் பின்னர் பாலைவனத்து மணலுள் மறைந்த கோக்ரா ஆறேயாகும். இதே கோக்ரா என்று பெயர் கங்கையின் கிளை நதி ஒன்றுக்கும் உண்டு. இவ்வாறு அவந்தி எனப்படும் குசராத்தின் கரைகளை அடைந்த குமரிக்கண்ட மக்கள் வடக்கு, வடமேற்கு, வடகிழக்கு என்று வடஇந்தியா முழுவதும் பரவினர். குமரிக் கண்டத்திலிருந்த போதும் புதிய இடத்திலும் அவர்களிடையில் உருவான பாடல்களே வேதப் பாடல்கள். அப்பாடல்களில் இன்னும் இனம் காண முடியாத இடப்பெயர்கள் குமரிக் கண்டத்திற்குரியனவாக இருக்க வேண்டும். எனவே குமரிக் கண்ட இடப்பெயர்களை அறிய வேதங்கள் உதவும். அதுபோலவே புராணங்களும் குமரிக் கண்ட மக்களின் வரலாற்றைப் புரிந்து கொள்ள மிகவும் உதவும்.
இன்று ஆரிய மொழிகள் என்ற வகைப்பாட்டில் கீழ் மேலையாரிய மொழிகள் என்ற பிரிவில் கிரேக்கமும் இலத்தீனும் வருகின்றன. அம்மொழிகளுக்கும் சமற்கிருதத்துக்கும் உறவுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் இம்மொழிகளுக்கு இடையில் காணப்படும் நெருக்கத்தைவிடத் தமிழுக்கும் கிரேக்க இலத்தீன் மொழிகளுக்கும், தமிழுக்கும் சமற்கிருதத்துக்கும் அடிப்படையான உறவு இருப்பதை எளிதில் காண முடியும். அதுபோல் உலகின் பல்வேறு பகுதிகளிலும் பேசப்படும் மொழிகளுக்கும் தமிழுடன் நெருக்கமான தொடர்பிருப்பதை மெய்ப்பிக்க முடியும். இதனடிப்படையில் உலகமொழிக் குடும்பங்கள் மறுவகைப்படுத்தப்பட வேண்டும்.
 
பினீசியர்கள் தென்னிந்தியாவிலிருந்து பாரசீகக் குடா வழியாக ஆசியாமைனர் சென்று குடியேறியவர்கள். அவர்கள்தான் கிரேக்கர்களுக்கு எழுத்துகளும் நாகரிகமும் வழங்கியவர்கள் என்று இரோடோட்டர் கூறுகிறார். ஐரோப்பா என்ற பெயரும் அவர்கள் தொடர்பானதே. தொட்டதெல்லாம் பொன்னாகும் கதையில் வரும் மன்னவன், ஓடிப்பசின் பாட்டன் காட்மஸ் எனப்படும் கடம்பன் அனைவரும் பினீசியர்களே. பினீசியர்கள் சிவந்த படகுகளில் பயணம் செய்தவராகக் கூறப்படுகிறது. நம் நாட்டுச் செம்படவர்களைப் பற்றி ஆய்ந்தால் தடையம் ஏதாவது கிடைக்கலாம்.
 
மக்கள் குமரிக் கண்டத்திலிருந்து தமிழகத்தினுள் நுழைந்து வடக்கு நோக்கிப் பயணம் செய்தமைக்குக் சான்றுகளாக இடப்பெயர்கள் அமைந்துள்ளன. பறளியாறு என்ற பெயர் குமரி மாவட்டத்தில் இரண்டிடங்களிலும் கேரளத்தில் ஓரிடத்திலும் சேலம் மாவட்டத்தில் ஓரிடத்திலும் வழங்குகிறது. இலங்கைக்கு நாகத்தீவு, சேரன்தீவு, தாம்பரபரணி என்ற பெயர்கள் இருந்திருக்கின்றன. இன்றைய நெல்லை தாமிரபரணியாற்றுக்குப் பொருனை, சோழனாறு என்ற பெயர்கள் இருந்திருக்கின்றன.
 
குமரிக் கண்டத்தில் முதலில் ஏழு குக்குலங்கள் இருந்திருக்கின்றன. அவற்றின் மூலவர்கள் ஏழு பெண்கள். அவர்களை ஏழு கன்னிகள் என்றும் ஏழு தாய்கள் என்றும் கூறுவர். பின்னர் அக்குலங்கள் ஆண்களின் தலைமையின் கீழ் இயங்கின. அவர்களை ஏழு முனிவர்கள் என அழைப்பர். இந்த ஏழு குக்குல முதல்வர்களின் துணையுடன் இந்திரன் ஆண்டான். உண்மையான ஆட்சித் தலைவர் இந்திராணியே. இந்திரனை இந்த ஏழு குக்குலத் தலைவர்களுமே தேர்ந்தெடுத்தனர், நினைத்த போது அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றினர். இந்திராணி தொடர்வாள். மகாபாரதத்தில் வரும் நகுசன் கதையையும் சோசப் காம்பெல் எழுதிய Masks of Gods-Primitive Mythology என்று நூலில் எகிப்திலிருந்த பண்டை நடைமுறை பற்றிய குறிப்பையும் ஒப்பிடுகையில் இதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒரு குமுகத்தில் அரசு தோன்றுவதற்கு முதற்படி மக்கள் குக்குலங்களாகப் பிரிந்திருப்பது மாறி நில எல்லை அடிப்படையில் பிரியத் தொடங்குவதே என்று ஏங்கெல்சு என்பார் குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் என்ற நூலில் குறிப்பிடுகிறார். உலக வரலாற்றில் மக்கள் நில அடிப்படையில் பிரிந்து நின்றதைத் தரும் முதல் ஆவணம் தமிழின் பொருளிலக்கணமே.
 
பொருளிலக்கணம் குமரிக் கண்ட மக்கள் குக்குல நிலையிலிருந்து மேம்பட்டு நிலங்களுக்கேற்ற வகையில் பொருளியலிலும் அதன் விளைவாகப் பண்பாண்டிலும் ஒருவருக்கொருவர் மாறி நின்றனர். அவர்களது குடும்ப அமைப்புகளும் போர்முறையும் மாறி நின்றன. குறிஞ்சி நில மக்கள் திருமணம் இன்றி சந்தித்த இடத்தில் கூடிப் பிரிந்தனர்; ஆ கவர்தலே போர் நோக்கமாக இருந்தது. முல்லை நில மக்கள் தாங்கள் விரும்பும்வரை சேர்ந்து ′′இருந்து′′ வேண்டாதபோது பிரிந்தனர்; போர் மேய்ச்சல் நிலத்துக்காக நடைபெற்றது. பாலை நிலம் வாணிகத்தின் வளர்ச்சியையும் பாலையின் கொடுமையையும் பொருட்படுத்தாது மருதத்துக்கும் முல்லைக்கும் பாலையினூடாக நடைபெற்ற போக்குவரத்தையும் அங்கு சிலர் வழிப்பறித்து வாழ்வதென்ற ஒரு புது நிலையையும் காட்டுகிறது; மக்கள் கூட்டுழைப்பிலிருந்து பிரிந்து வாணிகம், போர், வழிப்பறி என்று ஆணும் பெண்ணுமாக வெளியேறிதையும் ′′பொய்யும் வழுவும்′′ தோன்ற, கரணமெனும் திருமணத்தின் தேவையை உருவாக்கிய பின்புலம் பாலையில் வெளிப்பட்டது; போர் வாழ்வா சாவா என்ற நிலையில் நடைபெற்றது. மருதத்தில் திருமணத்தில் இணைந்த பெண் ஆடவனின் பரத்தையர் தொடர்பை முறியடிக்க முடியாத கையறு நிலையான பொருளியல் சார்புநிலை அடைந்தாள்; போர் கோட்டையிலுள்ள செல்வத்தைக் கொள்வதற்காக நடைபெற்றது. நெய்தலிலோ பெண் கைம்மைக் கொடுமைக்கு ஆளானாள்; போர் பேரரசுப் போராக, வெற்றி நோக்கியதாக இருந்தது.
 
பொருளிலக்கணம் தொல்காப்பியத்துக்கு வரும்போது அதன் மூல வடிவம் மிகவும் மாறுபட்டுவிட்டது.
ஆதாமும் ஏவாளும் ஈழத்தீவில்தான் வாழ்ந்தனர். அவர்கள் மகன் சேது என்பவன் பெயரால்தான் சேது என்ற பெயர் இலங்கை இந்திய நீரிணைக்கு ஏற்பட்டது என்று மெளலானா என்பவர் சேது முதல் சிந்து வரை என்ற நூலில் குறிப்பிடுகிறார். உடன்பிறந்த ஆபேலைப் பெண்ணுக்காகக் கொன்ற காயின் இராமனாக இருக்க வேண்டும் என்கிறார் அவர். உண்மையில் வாலிக்கும் சுக்ரீவனுக்குமே இந்த ஒப்புமை பொருந்தும்.
 
தமிழகத்தில் பெண்ணாட்சி நிலவியது என்ற மெகாத்தனிசின் குறிப்பு, சிலப்பதிகாரத்தில் பாண்டியர் குலமுதல்வி என்று ஒரு பெண்ணைக் குறிப்பது, திருவிளையாடற் புராணத்தில் தடாதகைப் பிராட்டி, நாட்டுப்புறக் கதைகளாக அல்லி, பவளக்கொடி போன்றோர் ஆகிய சான்றுகள் உள்ளன. சங்க இலக்கியம் மறைக்கும் இந்த உண்மைகளைச் சிலப்பதிகார ஆசிரியர் வெளிக்கொணருகிறார். குமரி என்ற பெயரையே அவர்தான் நமக்குச் சொல்லுகிறார்.
 
குமரிக் கண்டத்தில் மாபெரும் பொருளியல் வளர்ச்சி இருந்தது. அதனோடு பொருளியல், குமுகியல் கோட்பாடுகளும் உருவாகியிருந்தன. குபேரன் வடிவம் இதற்கொரு சான்று. குபேரனின் ஊர்தி மனிதனாகும். இந்த வடிவத்தின் பின்னணியில் இன்றைய மார்க்சியத்தின் கோட்பாடு புலப்படுவதைக் காணலாம். மனித மண்டை ஓடுகளில் குருதியைக் குடிப்பதுதான் மூலதனம் எனும் தெய்வம் என்று மார்க்சு கூறுகிறார்.
 
குமரி மக்கள் இன்றைய மேலை அறிவியலுக்குக் குறையாத அறிவியல் மேன்மை பெற்றிருந்தனர். தடயங்கள் எண்ணற்றவை:
1. 64 கலை அறிவுகளில் சில: வானில் நுழைதல், வானில் பறத்தல், நெருப்பைத் தடுத்தல், நீரைத் தடுத்தல், காற்றைத் தடுத்தல்.
2. தமிழக இலக்கியங்களிலும் தொன்மங்களிலும் காந்தருவர், இயக்கர், விஞ்சையர் என்ற மக்கள் பேசப்படுகின்றனர். இவர்கள் வானூர்திகளில் பறப்போர். இராவணன் ஓர் இயக்கம் என்றே கூறப்படுகிறான்.
3. இராவணனின் மாமன் மயன் எனும் அசுரத் தச்சன். இவன் பறக்கும் ஊர்தியை இயற்றியவன் என்று கூறப்படுகிறது.
4. உலகிலுள்ள இசைக் கருவிப் புனைவில் வீணை எனப்படும் யாழ் ஓர் இறும்பூது. எண்ணிக்கையில் குறைந்த நரம்புகளைக் கொண்டு யாழ்த் தண்டிலுள்ள பள்ளங்களின் உதவியால் ஆயிரம்வரை நரம்புகளை (இசைகளை) எழுப்ப முடியும். இந்த யாழ் இராவணனின் கொடியாகும். சிவனை மகிழ்விக்கத் தன் தலையைக் கிள்ளி, கையை ஒடித்து, நரம்பை உருவி யாழ் அமைந்து இசைத்தான் எனும் புராணக் கூற்று இந்த யாழை அவனே புதிதாகப் புனைந்ததைக் குறிப்பதாகலாம்.
5. தமிழகத்தில் ஒவ்வொரு புதுப்புனைவையும் செய்தவர் யார் என்பதைக் கண்டுபிடிக்கும் வகையில் தெய்வங்களுக்கு ஆயுதங்கள் உள்ளன.
 
சிவன் : நெருப்பு, உடுக்கு, மழு.
பரசுராமன் : கோடரி
பலராமன் : கலப்பை
இராவணன் : யாழ்
திருமால் : சக்கரம்
மூதேவி : குண்டாந்தடி.
 
ஒரு புராணக் கதையின்படி பருந்துகளின் தாயான பெண்ணும் நாகங்களின் தாயான பெண்ணும் முறையே அக்காள் தங்கைகள். தங்கையின் சூழ்ச்சியால் தமக்கை அவளுக்கு அடிமையாகிறாள். தமக்கையின் மகன் கருடன் பிறந்து போரிட்டு தாயின் அடிமைத்தனத்தை விலக்குகிறான்.
 
நாகமும் பருந்தும் தோற்றக்குறிகள். இரு மக்களுக்குள் நடந்த பூசலையே இது குறிக்கிறது. நாகங்கள் நம் தெய்வ வடிவங்கள் அனைத்திலும் உண்டு. பருந்து திருமாலின் ஊர்தியாக மட்டுமே காணப்படுகிறது.
உலகப் புராணங்களிலும் நாகத்துக்குச் சிறப்பிடம் உண்டு. பைபிள், கிரேக்கப் புராணம் போன்றவற்றிலும் ஒரு பெண்ணோடு அது தொடர்புபடுத்தப்படுகிறது, கில்காமேஷ் காவியத்தில் சாவா மருந்தாகிய கனியை அது பறித்துச் சென்று விடுகிறது.
 
பண்டை நாகரிகங்களில் தங்கம் அல்லது உலோக இறக்கைகள் உள்ள பருந்துதான் தங்கள் மூதாதை என்ற குறிப்பு காணப்படுகிறது. எரிக் வான் டெனிக்கான் பறவை போன்ற வானவூர்திகளில் வந்தோர் பண்டை மக்கள் மீது அணுகுண்டுகளைப் பொழிந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்று கூறுகிறார். அத்துடன் தாடி வைத்த நாகம் தங்களுக்கு நாகரிகத்தைத் தந்ததாகச் சில மக்கள் குறித்து வைத்துள்ளனர். கவிழ்ந்த கப்பல் மாலுமியைப் பற்றிக் கூறும் எகிப்திய தாள் குறிப்பில் நிலத்தின் அரசனாக ஒரு தாடி வைத்த நாகமே கூறப்படுகிறது.
 
இவற்றிலிருந்து நாம் பெறும் முடிவு:
 
நாகத்தையும் பருந்தையும் தோற்றக்குறிகளாகக் கொண்டிருந்த மக்களுக்குள் குமரிக் கண்டத்தினுள் கடும்பகையும் போரும் நிகழ்ந்தன. முதலில் உலகமெலாம் பரவியவர் நாகர்கள். அவர்கள் பரவிய இடமெல்லாம் பருந்தின மக்கள் தொடர்ந்து சென்று தாக்கினர். இதற்கு அவர்களது கண்டுபிடிப்பான வானவூர்தியும் அணுவாற்றலும் பயன்பட்டது. உலகமெலாம் பரவிய இந்த அணுவாயுதப் போரினால் அம்மக்களின் நாகரிகம் ஒரு முடிவுக்கு வந்தது.
 
எரிக் வான் டெனிகான் ஊர்திகளில் வந்து குண்டு போட்டோர் வேறு உலகங்களின்று வந்தவர் என்கிறார். மேலையர் தவிர வேறெவரும் நாகரிகமடைய முடியாது என்ற ஐரோப்பியக் கருத்தின் எதிரொலிதான் இது.
Serandipity என்ற சொல்லுக்கு அடிப்படையான The Three Princes of Serandip என்ற கதையும் முன்று கோட்டைகளோடு பறந்து சென்று எதிரிகளை அழித்த முப்புராதிகளின் கதைகளையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
 
குமரியை ஆண்டவர்களில் துவரைக் கோமானும் ஒருவர். துவரை என்பது வடக்கிலிருந்த துவாரகையல்ல. துவாரகா என்பதற்கு கதவகம் என்ற பொருள். இரண்டாம் கழகப் பாண்டியர் தலைநகராகிய கபாடபுரமே துவாரகை எனப்படும் துவரை. குமரி மாவட்டத்தில் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட, முத்துக்குட்டி அடிகளின் வரலாறு கூறும் அகிலத் திரட்டு அம்மானையும் ″தெற்கே கடலினுள் இருக்கும்″ துவரையம்பதி பற்றிக் கூறுகிறது.
 
கில்காமேஷ் சாவாமை பற்றி அறிந்துவர பாபிலோனிலிருந்து பல கடல்களைக் கடந்து ஒரு பெருங்கதவு வழியாக நுழைகிறான். அங்கு பெருவெள்ளத்திலிருந்து பிழைத்த நோவாவின் மூலவடிவமான உட்னாபிற்றிட்டிம் என்ற மனிதனைச் சந்திக்கிறான்.
சாவாமை உள்ளவனாகக் கூறப்படும் இயமனும் ஒரு பெருங்கதவுக்கு அப்புறமே வாழ்கிறான். இன்றைய உலோகம் காட்டியின் (Metal Detector) பண்டைய வடிவமோ இக்கதவு?
 
பாண்டிய மரபின் நீண்ட நெடும் வரலாற்றில் துவரைக் கோமான் போன்ற முல்லை நிலத்தாரும் குமரவேள் போன்ற குறிஞ்சி நிலத்தாரும் மீனவர்களும் இடம் பெற்றிருக்கிறார்கள் என்பதும் வெளிப்படை.
தமிழ் இலக்கணத்துறையில் தலையாய இரு கோட்பாடுகள் எதிரெதிராய் நிலவி வந்தனவாகத் தோன்றுகிறது. ஒன்று அகத்தியம் இன்னொன்று ஐந்திரம். பயன்பாட்டு வேறுபாட்டு அடிப்படையில் மொழியில் பிரிவினை தேவையில்லை என்பது அகத்தியக் கோட்பாடெனவும் சிறப்புத் தொழில்களுக்கென்று தனி எழுத்துகள் கொண்ட தனிக் குழூஉக்குறி மொழி ஒன்று வேண்டும் என்பது ஐந்திறக் கோட்பாடென்றும் கொள்ளலாம். இந்தப் பிரிவினைக் கோட்பாடே வெற்றி பெற்றது. பிரிவினைக்கு முன்பு வல்லின எழுத்துகளுக்கு நான்கு தனித்தனி ஒலிப்புகளும் அவற்றுக்குத் தனித்தனி வரியன்களும் இன்றைய பிற இந்திய மொழிகளில் காணப்படுவது போல் தமிழிலும் இருந்திருக்க வேண்டும். கிரந்த எழுத்துக்கள் எனப்படும் ஓலியன்களும் இருந்திருக்க வேண்டும்.
 
இன்றைய தமிழ் எழுத்துகளில் ஒரே வல்லின வரியனில் மூன்றுக்கு மேற்பட்ட ஓலியன்கள் பெறப்படுதல், தொல்காப்பிய சகரக்கிளவியும் அற்றோரன்ன என்ற முரண்பாடும் ந,ன,ற,ர மயக்கங்களும்
அஃதிவண் நுவலா தெழுந்து புறத் திசைக்கும்
மெய்தெரி வளியிசை அளவு நுவன் றிசினே
என்ற தொல்காப்பிய வரிகளும் ஐந்திரம் தெரிந்த தொல்காப்பியன் என்ற பாயிர வரிகளும் தொல்காப்பியருக்கும் அகத்தியருக்கும் நடைபெற்றதாகக் கூறப்படும் பூசல் பற்றிய புராண நிகழ்ச்சியும் சில தடயங்கள். அகத்தியம் மீதுள்ள காழ்ப்பினால்தான் அகத்தியர் வடக்கிலிருந்து வந்தார் என்ற கதை எழுந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது.
சிலப்பதிகார ஆசிரியர் தொல்காப்பிய விதிகளை அதன் மூலம் ஐந்திரக் கோட்பாட்டை ஏற்கவில்லை என்பது அந்நூலை ஆய்வோருக்குப் புலப்படும். சகரக் கிளவியைத் தாராளமாகவே கையாண்டுள்ளார் அவர்.
இந்த அகத்திய-ஐந்திர மோதல் உண்மையாக இருந்தால் சமற்கிருதத்தின் பிறப்பின் பின்னணி (ஆரிய இனப் பின்னணி பொய்யென்பதால்) விளங்கும். ஒரு தமிழ் நூலின் பழமையை ′′மொழித் தூய்மை′′ பற்றிய இன்றைய அளவுகோல் கொண்டு அளப்பது தவறு என்பதும் புரியும்.
 
குமரிக் கண்டப் பண்பாடு மிகப் பெரிய பரப்பும் கி.மு. 50,000 வரை நீண்டு செல்லும் மிகப்பெரிய கால இடைவெளியையும் கொண்டது. இப்பெரிய பரப்பில் இந்நீண்ட காலத்தினுள் என்னென்ன மக்கள் எங்கெங்கு வாழ்ந்தனர்; அவர்கள் கால வரிசையில் இயற்றியவை என்னென்ன என்பவையெல்லாம் அறிவது மிகவும் கடினமான பணி. ஆனால் தப்பெண்ணங்களை ஒதுக்கிவிட்டு இந்தியப் புராணங்கள் மட்டுமல்லாமல் உலகப் புராணங்கள் அனைத்தையும் ஆய்வு செய்ய வேண்டும். ஐரோப்பியப் பழம் புராணங்களை எழுத்தாளர் புதுமைப்பித்தனின் தந்தையார் சொக்கலிங்கம் பிள்ளையவர்கள் தொகுத்து அவை இன்று நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரியில் இருப்பதாகத் தெரிகிறது. அவற்றையும் பயன்படுத்தலாம்.
 
வரலாற்று மேதையான வில் டூறாண்டு யூதர்களைப் பற்றிக் கூறும்போது தவறென்று மெய்ப்பிக்கப்படாதவரை பைபிளில் கூறப்பட்டிருப்பவற்றையே யூதர்களின் வரலாறாக எடுத்துக் கொள்ளலாம் என்றார். நாமும் கிடைக்கும் தடையங்களைப் பின்பற்றி தன்னம்பிக்கையுடன் நம் குமரிக் கண்ட கால வரலாற்றை எழுதுவோம்.
 
எழுதியவர்: குமரிமைந்தன்.

Read more...

கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும்

மனிதனுக்கு தாபங்கள் இருக்கலாம். கோபங்கள் இருப்பது சரியா... இது பலரது கேள்வி. காரணம்- அதீத கோபமே பல சிக்கல்களை உற்பத்தி செய்கிறது. சிரிப்பு, அழுகையை போல் கோபமும் ஒரு வித உணர்ச்சி... கோபப் பட வேண்டிய இடத்தில் நாம் கோபப் படாமல் போனால், நாம் கோழையாக அல்லது முட்டாளாக அல்லது வாழவே தகுதி அற்றவனாக அல்லவா அடையாளம் காட்டப்படுவோம்- அதனால் தாபம் இருப்பதை
போல் கோபமும் அவசியமே என்கின்றனர்.

அது சரியாகவும் கூட இருக்கலாம்... ஏன் எனில் கோபம் குறித்து, அங்கங்கே நல்ல பொன்மொழிகளும் உள்ளன. "கோபம் இருக்கிற இடத்தில் தான் குணம் இருக்கும்" என்பதும் சான்றோர் வாக்கு.

கோபத்தில் பல வகைகள் உள்ளன. பொய் கோபம் ,நிஜக் கோபம்... நியாயமான கோபம், நியாயமற்ற கோபம்... தேவையான கோபம், தேவையற்ற கோபம்... என்று கோபங்கள் பல வகையாக விரிகிறது. கோபக்காரனாக இருப்பதிலும் சில நன்மைகள் உள்ளன. யாரும் அவரிடத்தில் கடன் கேட்க மாட்டார்கள். அவரை பார்த்து பலரும் அச்சப் படுவார்கள். யாரும் அவரை ஏமாற்ற நினைக்க மாட்டார்கள். நிச்சயம் பிறரால் ஒரு வட்டத்துக்குள்ளேயே வைக்கப் படுவார்.

ஆனால், அதே நேரம் சில பாதகங்களும் உள்ளது. மனைவி கூட கோபக்காரனை காதலிக்க யோசிப்பாள். யாரும் அவருக்கும் உதவ மாட்டார்கள். "கொடுத்து கெட்ட பேரு வாங்கறதுக்கு, கொடுக்காம்ம கெட்ட பேரை வாங்கிக்கலாம் " என்று ஒதுங்கி கொள்வார்கள். மரியாதை சில நேரம், மண்ணை கவ்வும்.

கோபங்களிலேயே சிறந்த கோபம் என்று ஒன்று உள்ளது. ஆச்சர்யமாக உள்ளதா... அது தான் நியாயமான கோபம்... கோபப்பட வேண்டிய இடத்தில் பட வேண்டிய கோபம். இந்த கோபத்திற்கு தனி மரியாதையும் உண்டு. கோபமே படாத ஒருவன், கோபமே படத் தெரியாத ஒருவன், கோபப்படுகிறான் என்றால் அதில் ஏதோ ஒரு நியாயம் இருக்கிறது என்று அந்த கோபம் பிறரால் கவனிக்கப்படுகிறது. பிறரால் கவனிக்கப் படும் கோபம் சரித்திரப் புகழை பெறும்.

சமுக அவலங்களை கண்டு பெரியார் அடைந்த கோபம், பல கதவுகள் திறக்க காரணமானது இல்லையா. நம் கோபம், நமக்கு மட்டுமல்லாமல் பிறருக்கும் நல்லது செய்ய வேண்டும். எந் நேரமும் கோபப்படும் ஒருவனின் கோபம், எவராலும் ஏற்று கொள்ளப் படுவதே இல்லை. "இவனுக்கு வேற வேலையே இல்ல" என்கிற விமர்சனம் தான் மிச்சமாகும். கவனிக்கவே படாத கோபத்தால், யாருக்கென்ன நன்மை விளையும்.

கோபம் எதன் அடிப்படையில் வருகிறது... எதன் அடிப்படையில் வரலாம்... எதிர்பார்த்த ஒன்று- கிடைக்காமல் போகும் போது, அந்த ஏமாற்றம் கோபமாய் மலர்கிறது. தான் சொல்வதை, பிறர் கேட்காமல் போகும் போதும்- கோபம் மலர்கிறது. இன்னும், இன்னும் நிறைய காரணங்கள் இருக்கிறது- கோபம் வர.

இரண்டு பேர் இருக்கிறார்கள். இரண்டு பேருக்குமே ஒரே விதமான சம்பவம் அல்லது ஒரே விதமான ஏமாற்றம், தோல்வி ஏற்படுகிறது. ஒருவர் கோபப்படுகிறார். மற்றவர் நிகழ்வுகளை கோபப் படாமல் ஆராய்கிறார். தன் தோல்விக்கு, பிறர் காரணமாகும் போது, வரும் கோபம் நியாயமானது. நம் தோல்விக்கு நாமே காரணமாகி, அதற்கும் அதே கோபப்பட்டால், இந்த கோபத்தை என்னவென்று சொல்வது.

வயது வித்தியாசம் பாராமல், எல்லோராலும் வெறுக்கப்படுவது- பிறர் காட்டும் கோபத்தையே. அதே போல் எல்லோராலும் விரும்பப்படுவது- தாம் கோபப்படாமல் இருக்க வேண்டும் என்பதே. ஆனால் அவ்வாறு இருக்க முடியாது போவதே சோகம். கோபத்தின் ஒரு பகுதி, பிறராலேயே ஏற்படுத்தப் படுகின்றது அல்லது தூண்டப்படுகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

இந்த கோப விஷயத்தில், எனக்கு இரண்டு முகங்கள் உள்ளன. நிறைய பேருக்கும் இதே அனுபவம் இருக்கலாம். "எப்படிங்க கோபப்படாம்ம இருக்கீங்க. ரெம்ப பொறுமை சார்- நீங்க" என்று என்னிடம் சிலர் கேட்பார்கள். அதே என்னிடம் வேறு சிலர், "ஏங்க இப்படி எரிஞ்சு, எரிஞ்சு விழுறிங்க. உங்களுக்கு பொறுமையாவே பேச தெரியாதா" என்றும் கேட்பார்கள். அப்படியெனில் எது "நாம்". இரண்டுமே நாம் தான். நமது இரண்டு குணாதிசயத்தையுமே- நம்மை சுற்றி உள்ளவர்களே உருவாக்குகிறார்கள் அல்லது தீர்மானிக்கிறார்கள்.
 
இரண்டு பேர்- ஒரே கேள்வியை கேட்கிறார்கள். ஒருவருக்கு கோபம் படாமல் பதில் சொல்கிறோம். மற்றவர்களுக்கு கோபமாய் சொல்கிறோம். ஏன் இந்த பாகுபாடு. கேள்வி கேட்கும் முறை. பதிலை உள்வாங்கும் முறை... அவ்வளவே. எப்படி நமக்கும், நம் கதையில் வரும் கதாபாத்திரத்திற்கும் சற்றும் தொடர்பு இல்லையோ- அப்படித்தான் சில நேரம்-
நமக்கும், நமது கோபத்திற்கும் சம்பந்தமில்லாத நிலையை நாம் அடைகிறோம்... அவ்வளவே.

"கோபத்தை கட்டுப்படுத்துங்க" என்று நண்பனாக சொன்னால்- யாரும், ஒரு போதும் ஏற்று கொள்வதில்லை. அதே நேரம் மருத்துவர். "டென்ஷனை குறைங்க" என்றால் கேட்டு விடுகிறோம். கோபம், ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கையையும் திசை திருப்பக் கூடிய வல்லமையை பெற்றுள்ளது. ஆனால் அது பல நேரம், மோசமான திசைக்கு தள்ளக் கூடிய திசை காட்டியாகவே உள்ளது என்பதே வருத்தத்திற்குரிய செய்தி.

கோபம், நிச்சயம் குடும்ப வாழ்க்கைக்கு எதிரி. கோபக்காரர்களின் துணைகள்," கோபத்தின் காரணமாகவே, விவாகரத்து கோருவது" யதார்த்தமான உண்மைதானே.

"கோபப்பட்டு- இந்த உலகத்துல் சாதிக்கப் போறது ஒண்ணுமே இல்ல" என்று பாமரர்கள் மிக எளிமையாக, ஆணித்தரமாக சொல்ல கேட்டு இருக்கிறோம். இன்று பல நோய்களை பெற்றெடுப்பது கோபங்களே... அதனால் கோபங்களை கட்டுபடுத்த- மனிதர்கள் தேவையற்று கோபமும் பட வேண்டாம். பிறரை கோபப்படுத்தவும் வேண்டாம்.

Read more...

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP