கணிணியில் அதுவும் இணையத்தில் காலம் நேரம் பார்க்காமல் இரவு முழுவதும் உறங்காமல் ராக்கோழியாக உலவும் பழக்கம் கொண்டவரா நீங்கள்? இந்த கேள்விக்கு பதில் ஆம் என்று கூறும் அனைவருக்கும் உதவும் விதமாக எழுத பட்டதுதான் இந்த பதிவு. இன்றைய கணிணி யுகத்தில் உலகில் உள்ள பலதரப்பட்ட மக்கள் பிறருடன் தொடர்பு கொள்ளவும் , தங்களது அறிவு ஆற்றலை பெருக்கி கொள்ளவும் இணையத்தில் குறைந்தது ஒரு நாளைக்கு 15 மணி நேரங்கள் உலாவுகின்றனர். இதன் காரணமாக அவர்களது உணவு, உறக்கம் என அனைத்தையும் மெய்மறந்து விடுகின்றனர். பெரும்பாலும் பதிவுலகத்தில் உள்ளவர்களும், சமூக வலைத்தளங்களை உலவும் நண்பர்களும் இந்த விசயத்திற்கு சிறந்த எடுத்துகாட்டுகள். இவர்கள் அனைவருக்கும் உதவும் விதமாக அமைந்துதான் "Bed Time Help" என்ற மென்பொருள்.
Read more...
இந்த மென்பொருள் நமது உறங்கும் நேரத்தை சரியாக நினைவு படுத்தி நம்மை உறங்க செல் என கட்டளை இடுகிறது. இந்த மென்பொருளின் அமைப்புகளில் சென்று நீங்கள் உறங்க செல்லும் நேரத்தை தேர்ந்தெடுத்து கொள்ளவும். பின்பு எவ்வளவு நேரதிருக்கு ஒரு முறை உங்களக்கு நினைவுபடுத்த வேண்டும் என்பதையும், உங்கள் உறங்கும் நேரம் வந்தவுடன் கணிணியின் இயக்கத்தை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதையும் தேர்வு செய்து கொள்ளுங்கள். இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்குங்கள்.
தெய்வமுரசு தனித்தமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் ::
தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை வழக்கில் உள்ள அரபு எண்களுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தல்.
மதியால் பெயர் பெறற மாதங்களின் பெயரைத தூய தமிழால் வழங்குதல்.
அமாவாசை - பௌர்ணமி, ஏகாதசி, சுக்லபட்சம்-கிருஷ்ணபட்சம் எல்லாம் நமக்கு ஏன்? மறைமதி-நிறைமதி, பதிற்றொருமை, வளர்பிறை-தேய்பிறை என அவற்றின் தூய தமிழ் வடிவங்களை உலா வரச் செய்தல்.
பண்டிகைகள்,விழாக்களைத் தமிழ்ப் பெயர்களால் வழக்கில் உலவவிடல்.
முகூர்த்தம்-முழுத்தம் என தூய தமிழால் வழங்கப் பெறல்.
நாயன்மார்கள்,மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் சிறந்த நாட்களின் குறிப்புகள் தமிழில்.
மொத்தத்தில் எண்ணிலும், எழுத்திலும், எதிலும் தமிழ் மணம்!
Subscribe to:
Posts (Atom)