மனைவிகளை புரிந்து கொள்வது எப்படி ?

Sunday, April 18, 2010

எந்த பெண்ணும் தாயாய், மகளாய், சகோதரியாய் ஓரளவேனும் சக்ஸஸ் ஆகிறாள். ஆனால் நூற்றுக்கு 99.9 சதவீத பெண்கள் மனைவிகளாக தோற்றுப் போகிறார்கள்.

( 50 சதவீதம் பேர் நாத்தனார்/மாமியார்/மருமக்களாயும் தோற்றுப்போகிறார்கள்.இது குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்)

மகளிர் மனைவியராய் தோற்றுப்போக ஆயிரம் காரணங்கள் உள்ளன. சிலவற்றை இப்போது பார்ப்போம். சேடிஸ்டு கணவன் மார்களிடம் (கணவர்களுக்கு ஏது மார்) மாட்டிக் கொண்டுவிட்டவர்கள் கதைக்கு நான் போகவில்லை. சராசரி மனைவிகள் விஷயம் தான் இங்கு சப்ஜெக்ட்.

பெண்கள் மனைவியராய் தோற்றுப்போக கடந்த தலைமுறை பெண்களே காரணம். ஆமாங்க. இப்ப மருமகளா என்ட்ரி கொடுத்த பெண்ணையே எடுத்துக்கங்க(உதாரணமாண்ணே..) இவளை வளர்த்த பெண் அதான் அம்மாக்காரி இவளை வளர்க்கறப்பவே

"த பாரும்மா! நீ பேசிக்கலா மனுச ஜென்மம். ஆணானாலும்,பெண்ணானாலும் முதல்ல நீ மனுச ஜென்மம்.

ஒரு மனுச ஜன்மமா ஒரு ஆண் பிள்ளைக்கு என்னென்ன உரிமைகள் இருக்கோ எல்லா உரிமைகளும் உனக்குமிருக்கு. எந்த நிலையிலும் உன் உரிமையை விட்டுக்கொடுக்க தேவையில்லை.

ஒரு நாள் நீ வாசல் தெளிச்சா மறு நாள் உன் தம்பி தெளிக்கட்டும். ஒரு நாள் அப்பா,ஒரு நாள் நான். குடும்பங்கறது ஒரு அமைப்பு. இதுல நாமெல்லாரும் சம உரிமையுள்ள உறுப்பினர்கள். கடமையை செய்யற கடமை இருக்கிறாப்ல உரிமைக்காக போராடற உரிமையும் இருக்கு.

இயற்கை உனக்கு ஒரு சில இன் கன்வினியென்ஸை கொடுத்திருக்கலாம். ஆனால் அதுக்கும் குடும்பத்துல,சமூகத்துல உன் பொசிஷனுக்கும் எந்த தொடர்புமில்லே.

ஹார்டி பாடி,விண்டி மைண்ட், ஹோலி சோல் இது எல்லா மனுச ஜன்மத்துக்கும் அவசியத்துலயும் அவசியம்.இதுல ஆண் பெண் வித்யாசமே கிடையாது.

இந்த குடும்பமும்,சமூகமும் உனக்கு சில (உப்புக்கு உதவாத) சலுகைகளை கொடுத்து உன் உரிமையையே பறிச்சுரும். நீ அதுக்கு இடம் கொடுக்காதே. லாஸ் ஆஃப் ப்ளட் இருக்கும். அதை ஈடு செய்ய நல்லா சாப்பிடு. கர்ப காலத்துல சில மாசம் சரியா சாப்பிட முடியத போயிரும், குழந்தைக்கு நீ உன் உடல்ல இருந்து,சக்திய,ஊட்டத்தை தரவேண்டி வரும். இதையெல்லாம் மனசுல வச்சு நல்லா சாப்பிடு, சத்துள்ளதை சாப்பிடு. இதான் வித்யாசம். மத்தபடி ஒரு ம...ரும் இல்லைனு சொல்லி வளர்த்திருக்கனும்.

அப்படி வளர்த்திருந்தா இந்த மருமகள் ( மாட்டுப்பெண்ணில்லிங்கோ மாற்றுப்பெண் அதாவது நம்ம வீட்டு பெண் கல்யாணம் கட்டி வெளிய போயிருச்சு அதுக்கு மாற்றா எக்சேஞ்ச் ஆஃபர்ல வந்த பொண்ணு ) இப்படி எல்லாம் நாற வேண்டி வராது. என்ன செய்ய வளர்த்துட்டாங்க.

அஞ்சில வளையாதது ஐம்பதுல வளையுமா? ட்ரை பண்ணித்தான் பாருங்களேன்.

பெண் மனைவியா தோத்துப்போனா நீ கணவனா,அப்பனா,குடும்ப தலைவனா கூட தோத்துப்போயிருவ. So.. பெண்ணை மனைவியா ஜெயிக்க வைக்க வேண்டியது ஏதோ சேவைனு ,அறிவு ஜீவித்தனம்னு நினைச்சுக்காதே.

முதல்ல பொம்மனாட்டிய புரிஞ்சிக்க. அவள் உன் காம வெறியை தீர்க்க விலைக்கு வாங்கின ஸ்பென்சர் பொம்மை கிடையாது. அவளும் ஒரு மனுச ஜன்மம்.அவளுக்கும் தன்மானம்,லட்சியம், சுயகவுரவம்,சில கனவுகள் எல்லாம் இருக்கும். எங்கயோ பிறந்தா, எங்கயோ வளர்ந்தா உன் ஜீன் வேற, நீ வளர்ந்த என்விரான்மென்ட் வேற, இப்படி அனேக அம்சங்கள் வேற வேறயா இருக்கு. நீ ஒரு ஃப்ரேமை அடிச்சு அந்த ஃப்ரேமுக்குள்ள முடங்கிகிடனு சொன்னா ஆரம்பத்துல சில நாள் நல்லாவே ஓடும்.

ஃப்ரெண்ட்ஸ் சர்க்கிள்ள "உங்க வீட்ல மதுரையா ,சிதம்பரமானு கேட்டா " பந்தாவா அந்த பருப்பெல்லாம் வேகாது கண்ணா நம்ம வீட்ல நான் போட்டதுதான் சட்டம்னு சொல்லிக்கலாம்.

அவள் வீக்கர் செக்ஸ், ஃபிசிக்கலா தான் வீக்கு, சைக்கலாஜிக்கலா செமை ஸ்ட் ராங்கு. அவளை நீ அடிமைப்படுத்திட்டன்னு வை . அடிமை என்ன பண்ணுவான் ? புரட்சி பண்ண சமயம் பார்த்துக்கிட்டிருப்பான். நீ உன் லெவல்ல உன்னால சமாளிக்க முடியாத பிரச்சினைல மாட்டினப்போ தன் விடுதலைக்கு ட்ரை பண்ண ஆரம்பிச்சுருவான்.

நீ எஃப்.டி. போட்ட ஃபைனான்ஸ் கம்பெனிக்காரன் ஓடிப்போனப்பவோ, ஆஃபீஸ்ல மெமோ வாங்கி சஸ்பெண்ட் ஆனப்பவோ வச்சுருவா ஆப்பு. டேக் கேர்.

மனிதர்களில் இரண்டு வகைனு ஒரு பதிவை படிச்சிருப்பிங்க. பொதுவா பெண் சந்திர குணங்கள் கொண்டவ. (விதி விலக்குகள் இருக்கலாம்) . அவள் ஒரு ஆறு . நீ ஒரு கரை . அவள் பெருக்கெடுத்து ஓடறப்ப நெகிழ்ந்து கொடுத்தா, ஒன்னு ரெண்டு சேனல் திறந்துவச்சா ஓகே.இல்லேன்னா கரையே காணாம போயிரும்.

அவளை உனக்கு டூப்ளிகேட்டாவும் மாத்தலாம். அல்லது அவள் ஒரிஜினலா இருக்க சைடு கொடுத்து அவ கிட்டே இருக்கிற சில பிரத்யேக திறமைகளை உன்+உன் குடும்ப வளர்ச்சிக்கு உபயோகிச்சுக்கவும் முடியும். உனக்கு எது நல்லதுனு நீயே முடிவு பண்ணு.

பெண் இயற்கையின் பிரதி. இயற்கையின் நிதி, இயற்கையின் பிரதி நிதி. இயற்கைய அப்சர்வ் பண்ணி, ரசிக்க கத்துக்கிட்டா அதன் போக்கை புரிஞ்சிக்கிட்டு அதன் போக்குல போய் உபயோகிச்சுக்க கத்துக்கிட்டா மாசத்துக்கு மூணுமழை கியாரண்டி.

நாஸ்திதான்.

சில நேரங்கள்ள நீ ஒரு தந்தையா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற கடைக்குட்டி பொண்ணு வெளிப்படறப்போ)

சில நேரங்கள்ள நீ ஒரு மகனா இருக்க வேண்டி வரும். (அவளுக்குள்ளே இருக்கிற தாய் வெளிப்படறப்போ)

நீ சைக்காலஜிப்படி பார்த்தாலும், ஜோதிஷத்தின் படி பார்த்தாலும் ஒவ்வொரு நாலு நிமிசத்துக்கும் மனுஷ மனம் மாறுது, ரெண்டு மணி நேரத்துக்கு ஒரு தரம் முழுசா மாறுது.

உன் மனசும் மாறுது,அவள் மனசும் மாறுது. மாறாதது மாற்றம் ஒன்னுதான். நீ மாற்றத்தை ரெகக்னைஸ் பண்ணிட்டா உன் வாழ்க்கையே ஒரு ஸ்வர்கம். அதை ஏத்துக்கலன்னா அதான் நரகம்.

சரி மனைவிமாரோட செயல்கள்ள எரிச்சலூட்டற சில சமாசாரங்களையும் அதுக்குண்டான பின்னணி காரணங்களையும் பார்ப்போம் . புரிஞ்சிக்கிட்டு மேக்கப் பண்ணிக்கிட்டு வாழ்க்கைய ஓட்டப்பாருங்க தலை !

1.மனைவியரின் மனதில் செக்ஸ் என்பது அவர்கள் கணவனுக்கு தரும் சுகம், தாங்கள் செய்யும் தியாகம் என்று நினைப்பது.

(ஒரு வகையில் இது உண்மைதான். 23 தடவை அசைக்கப்பட்டால் அன்றி பெண்ணுக்கு ஆர்காஸம் ஏற்படாது. நம்மவர்கள் 7 அசைவுகளுக்கே நாக் அவுட்.)

2.வேறு எவனிடமும் படுத்துக் கொள்ளாததே பெரிய தகுதி என்று நினைப்பது.

( அவிங்க காய் கறிகாரன் கிட்டே அரை நிமிசம் அதிகம் பேசிட்டா உங்களால தாங்கிக்க முடியுமா?)

3.தன்னை,தன் தந்தை,சகோதரர்களை மட்டுமே மையமாக கொண்டிருத்தல்.

அவிக வீக்கர் செக்ஸு. இன் செக்யூரிட்டி பிராப்ளம். இதுக்கு நீங்களும் ஒரு காரணம். ஹும்.. கல்யாணத்துக்கு முன்னாடி நான் அம்பானி கூட மூணு சீட்டு விளையாடிக்கிட்டிருந்தேன். கணக்கா பீலா விட விட அவிக இன்செக்யூரிட்டி அதிகமாகுது. பொம்பள மனசு கொடி மாதிரி. வம்ச விருட்சத்தை சுத்திக்கிடறாங்க.

லைஃப் ஈஸ் ரிலேஷன் ஷிப். நீங்க உங்க நண்பர்கள் கிட்டே ரிலேஷன்ஷிப் மெயின்டெய்ன் பண்ணலை. அது மாதிரிதான் இதுவும். அட நீங்க ஒரு பிசியான பிசினெஸ் மேக்னட்டு. அவிக உங்க பி.ஆர்.ஓனு நினைச்சிக்கிருங்க. அவிக சொந்தம் உங்களுக்கும் சொந்தம்தானே .கொஞ்சமா பப்ளிக் ரிலேஷனை அவிகளும் மெயிண்டெயின் பண்ணட்டுமே. சனம் லாட்டரி டிக்கெட் மாதிரி .ஒத்த ரூபா இன்வெஸ்ட் பண்ணி வச்சா என்ன போச்சு.

4.வீக்கர் செக்ஸ் என்பதால் தாழ்வு மனப்பான்மைக்கும், அபத்திர உபாதைகளுக்கும் உள்ளாகி (இன் செக்யூரிட்டி ஃபீலிங்க்)கவைக்குதவாத தங்க நகைகள்,வங்கி டிப்பாஸிட்டுகள் மீது கவனம் வைப்பது. இது விஷயமாக நச்சரித்து கொண்டே இருப்பது.

(கிடக்கட்டுமே. என்ன போச்சு. ஒரு அசந்தர்ப்பம் வரும்போது உங்களுக்கும் உதவுமில்லியா. அவிக இன்செக்யூரிட்டிக்கு நீங்களும் காரணம்தான். ரோட்ல போறச்ச

பசு மாடு போனா அதையும், மனைவியையும் மாறிமாறி பார்க்கிறது நீங்கதானே.அவிக இப்படி கோமாதா கணக்கா மாற நீங்களும் ஒரு காரணம்தானே)

5.ஃபோர்வீலர்கள்,கலர் டிவி, பிளாஸ்டிக் குப்பை இன்னபிறவற்றின் மூலம் தம்மை சமூகத்தில் ஸ்தாபித்துக் கொள்ள முயல்வது.

( ஒரு ரகசியம் சொல்லவா தலை ! இதெல்லாம் கடந்த பதிவுல சொன்னேனே தன் ஏரியாவ எக்ஸ்டெண்ட் பண்ணிக்க நாய் மூத்திரமடிக்குது, அரசியல் வாதி பேனர் வைக்கிறான்னு அந்த கதைதான் இதுவும்.உயிர்களோட அடிப்படை உந்துதல் இனப்பெருக்கம்/விரிவாக்கம் என்ற இரண்டுதான். அவிக உயிர்ப்பா இருக்காங்கங்கறதுக்கு இதெல்லாம் ஒரு அடையாளம். உங்களால முடிஞ்சா விரிவாக்கத்துக்கு இது ஒன்னே வழியில்லை. நம்ம காலனில நாலு தாய்குலத்தை மோட்டிவேட் பண்ணி மரம் நடு, ரீடிங் ஹால் வை, லைப்ரரி வை, ஸ்தூலமா பார்த்தா தான் நீ செய்யறதும் நான் சொல்றதும் வேற வேற சூட்சுமத்துல ரெண்டோட நோக்கமும் ஒன்னுதான். உன் வழி ரஜினி காந்த் மாதிரி தனி வழி . மண்டைய பிச்சிக்க வைக்கும் . நான் சொல்ற வழி சமூக வழி. வாழ்க்கைய சுமுகமாக்கும்னு எடுத்து சொல்லுங்க)

6.ஒன்றோ ,இரண்டோ பெற்றதுமே கணவனை டேமேஜ் பார்ட்டியாக நினைத்து தம் வாரிசுகளுடன் நெருக்கம் வளர்ப்பது. கணவனை அலட்சியப்படுத்துவது.

(இதுக்கும் நீங்க தான் காரணம். நெஞ்சை தொட்டு சொல்லுங்க. இளமை வேகத்துல அவிகள வெறும் உடம்பாவே பார்த்திக்கிட்டிருந்திங்க. இந்த கான்செப்ட் அவிக சப் கான்ஷியஸ்லயும் என்ட் ரி கொடுத்துருச்சு.

பலான நேரத்துல கூட இடுப்புல டயர், பழனி விபூதி பைனு நக்கலடிச்சதுண்டா இல்லையா. இதெல்லாம்தான் அவிகளை பிள்ளைகளை நோக்கி டைவர்ட் பண்ணுது. இது ஒரு கோணம். இன்னொரு கோணத்துல பார்த்தா இதெல்லாம் உங்க கற்பனையா கூட இருக்கலாம். உயிர்களிடையிலான நெருக்கத்தை வளர்த்து இணைப்பது ஸ்பரிசம். அந்த ஸ்பரிசம் உங்களுக்கிடையில குறைஞ்சி போச்சு. கணக்கு போட்டு பாருங்க பலான நோக்கத்தோடான ஸ்பரிசத்தை விட்டுட்டு எத்தனை தடவை அணைச்சிங்க,முத்தமிட்டிங்க, தலைக்கு எண்ணெய் தேச்சி விடச்சொன்னிங்க ( அதான் ஷாம்பூ வாஷ் வந்துருச்சில்ல),முதுகு தேய்க்க சொன்னிங்க ( ப்ரஷ் வந்துருச்சுல்ல) .

இந்த வயசுல உங்களுக்கு செய்யனுங்கற துடிப்பு இருந்தும் செய்ய முடியாத வேலைகளை உங்க பிள்ளைகளுக்கு செஞ்சு உங்களுக்கே செஞ்சதா சைக்கலாஜிக்கலா, சப் கான்ஷியஸ்ல திருப்தி பட்டுக்கறாங்கனும் சொல்லலாமில்லியா.

7.கணவன் வாங்கி வந்த 54 இன்ஞ்ச் கலர் டி.வி வாங்க பணம் எப்படி வந்தது என்று யோசிக்க மறுப்பது.

( என்னிக்காவது நீங்க அவிகளை ரோசிக்க விட்டிங்களா, அதுலயும் இந்த மாதிரி விசயத்துல ரோசிக்கவே அனுமதிக்கலை. அவிகளுக்கு மூளைனு ஒன்னிருக்கிறதாவே நீங்க ஒத்துக்கிடலியே. ஒரு வேளை ரோசிச்சு எதுனா ரெகமெண்ட் பண்ணா ச்சும்மா விட் ருவிங்களா)

8..விரிந்த உலகத்தில் சிற்றெறும்பான கணவனுக்கு அதீத முக்கியத்துவத்தை தந்து அவனுள் அகங்காரத்தை யூரியா போட்டு வளர்ப்பது. விசிட்டர்களிடம் அவர் தூங்குகிறார்,சாப்பிடுகிறார் என்று காப்பாற்றுவது(?) அவனுக்கு வரும் செல் அழைப்புகளை அட்டெண்ட் செய்வது.

(இதையெல்லாம் நீங்க ரசிக்கிறிங்க , என் கரேஜ் பண்றிங்க. நாய்க்கு பிஸ்கட் போட்ட மாதிரி உங்க ஈகோவை சேட்டிஸ்ஃபை பண்ணி கவுக்க வழி பண்ணதே நீங்க தானே)

9.என்னடா கிம்பளப் பணத்தில் இப்படி வேட்டு விடுகிறானே நாளை ஏ.சி.பி யில் மாட்டினால் நம் நிலை என்ன என்று யோசிக்க மறுப்பது. நீங்கதான் எல்லாத்தயும் சென்டர் லிஸ்ட்ல வச்சி அவிகளை மானில அரசு மாதிரி ஆக்கிட்டிங்களே. மானில சுயாட்சி கேட்டா கூட பிரிவினை வாதிகளை இரும்புகரம் கொண்டு அடக்குவோம்னு மத்திய அரசு அறிவிக்கிற மாதிரில்ல இருக்கு உங்க பிஹேவியர்.

என்னைக் கேட்டால் நாட்டில் நில‌வும் ல‌ஞ்ச‌ லாவ‌ண்ய‌ங்க‌ளுக்கு கார‌ண‌மே க‌ண‌வ‌ன் மாரின் செக்ஸ் குறைபாடுக‌ள் தான் என்று சொல்வேன்.

மனித உடலின் அடிப்படை பசி உடற்பசி. அது ஒன்று தான் மனிதனில் உள்ள மிருகத்தை சற்று நேரமாவது வெளியே உலவவிட்டு,இதப்படுத்தி, பதப் படுத்துகிறது. உடற்பசி தீராத பட்சம் மன மிருகம் ரத்த காவு கேட்கிறது.

இவள் கலர் டி.வி கேட்பாள் அவன் ரத்தத்தை வியர்வையாக்கி சிந்தி கொண்டுவரவேண்டும். ஆம் செக்ஸில் திருப்திய‌டையாத‌ ம‌னைவி ஹும் நீ அதுக்குத்தான் லாய‌க்கில்லே இதை‌யாவ‌து வாங்கித் தாயேன் என்று கேட்பாள் போலும். ஹும் நாம் அதுக்குத் தான் லாய‌க்கில்லே இதையாவ‌து வாங்கித் த‌ருவோம் என்று க‌ண‌வ‌ன் வாங்கித் த‌ருவான் போலும்

ப‌திவு எங்க‌யோ ஆர‌ம்பிச்சு எங்க‌யோ போயிருச்சு. மறுபடி உடைச்சி திருப்பறேன்.

Read more...

பத்து பொருத்தம்?

திருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் வரன்கள் இருவரது ஜாதகத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.

அதென்ன பத்து பொருத்தம்?

ஜோதிடர் ஏதோ சொல்கிறார், நாங்களும் கேட்கிறோம் என்று தான் இந்த கேள்விக்கு நம்மில் பலர் பதில் சொல்வார்கள்.
நீங்களும் அந்த பத்து பொருத்தம் என்னவென்று அறிய வேண்டாமா?

1. தினப் பொருத்தம் : இதை நட்சத்திர பொருத்தம் என்றும் சொல்வார்கள். ஆண், பெண் இருவரது ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பற்றி தெரிந்து கொள்ள இந்த பொருத்தம் பார்க்கப்படுகிறது.

2. கணப் பொருத்தம் : இது தான் குணத்தை பற்றி தெரிந்து கொள்ளக்கூடிய பொருத்தம். மனைவியாக வரப்போகிறவள், கணவனாக வரப்போகிறவன் எத்தகைய குணத்தை பெற்றிருப்பான் என்பதை இந்த பொருத்தத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

3. மகேந்திரப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் ஆணுக்கும், பெண்ணுக்கும் இந்த பொருத்தம் இருந்தால் தான் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதனால் இந்த பொருத்தம் ரொம்பவே முக்கியம்.

4. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான், திருமணம் செய்பவர்கள் வாழ்வில் செல்வம் கொட்டும். அதனால், இதுவும் முக்கியம் தான்.

5. யோனிப் பொருத்தம் : இது மிக, மிக முக்கியமான பொருத்தம். கணவன்-மனைவி இருவரும் தாம்பத்திய வாழ்க்கையில் எந்த அளவுக்கு திருப்தியாக இருப்பார்கள் என்பதை சொல்லக்கூடியது இது. அதனால், இந்த பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

6. ராசிப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும். அதாவது, வாழையடி வாழையாக குடும்பம் தழைக்கும்.

7. ராசி அதிபதி பொருத்தம் : குடும்பம் சுபிட்சமாக-சந்தோஷமாக இருக்குமா என்பது தெரிவிக்கக்கூடியது இந்த பொருத்தம்.

8. வசிய பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவன்-மனைவிக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்படும். இல்லையென்றால் சண்டைக்கோழி தான்.

9. ரஜ்ஜூப் பொருத்தம் : இந்த பொருத்தம் இருந்தால் தான் கணவனுக்கு ஆயுள் பலம் உண்டாகும். பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை உறுதி செய்யும் இந்த பொருத்தம் இருப்பது மிக மிக அவசியம்.

10. வேதைப் பொருத்தம் : திருமணம் செய்யப்போகும் தம்பதியர் வாழ்வில் சுக-துக்கங்கள் எந்த அளவில் இருக்கும் என்பதை கணிக்கக்கூடியது இந்த பொருத்தம். இந்த பொருத்தம் ஓ.கே. என்றால் தான், பின்னாளில் வாழ்வில் பிரச்சினைகள் அதிகம் இருக்காது.

- இந்த பத்து பொருத்தங்கள் எல்லோருக்கும் வாய்ப்பது மிகவும் கடினம். இவற்றில் தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜூ ஆகிய 5 பொருத்தங்கள் தான் மிகவும் முக்கியமானவை என்கிறார்கள் ஜோதிட வல்லுனர்கள்.
 
பத்து பொருத்தம் பற்றி ஜோதிடம் இப்படிச் சொன்னாலும், அதே ஜோதிடம் இன்னொரு பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறது. அது தான் மனப் பொருத்தம். மனப் பொருத்தம் இருந்தால் மாங்கல்ய பொருத்தம் உண்டு என்பது ஜோதிட கருத்து. இதை பலர் கண்டு கொள்வதே இல்லை.

பத்து பொருத்தங்களை பார்க்கும் நாம் மனப் பொருத்தத்தையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். அதாவது, திருமணம் செய்யப்போகும் பெண்ணுக்கு ஆணை பிடித்திருக்கிறதா என்றும், ஆணுக்கு பெண்ணை பிடித்திருக்கிறதா என்றும் கேட்டு உறுதி செய்வது அவசியம். அதன் பின்னர் தான் திருமணத்தை நிச்சயம் செய்ய வேண்டும். இதை ஜோதிட சாஸ்திரமே வலியுறுத்துகிறது.

Read more...

ஆரோக்கியமான தலை முடி

தழையத் தழைய தலைமுடி உள்ள பெண்களை பார்ப்பதே அரிதாகி விட்டது. குழந்தைகளுக்கு தலைமுடியை `பாப்` செய்யும் பழக்கம் வந்து பத்தாண்டுக்கும் மேலாகி விட்டது. இன்றைய பேஷன், பிஞ்சுக் குழந்தைகளுக்கு கூட, `கலரிங்` போடுவது தான்.


ஒருவரின் தலையில் சராசரியாக அதிகபட்சம் ஒரு லட்சம் தலைமுடிகள் இருக்கின்றன. அவற்றில் அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப, தினமும் ஏறக்குறைய 100 முடிகள் உதிர்கின்றன. தலைமுடியை பராமரிப்பதில் கவனம் செலுத்த வேண்டுமே ஒழிய, பாப் வெட்டிக்கொள்வது, ரசாயன ஷாம்பு, கலரிங் செய்வது போன்றவற்றில் அதிகமாக கவனம் செலுத்தக்கூடாது. அப்படி செய்தால், நாற்பது வயதுக்கு பின், அதன் சாயம் வெளுத்துவிடும்.

மிதமான நீரில் தான் குளிக்க வேண்டும்; அதிக வெந்நீர் தலைமுடிக்கு ஆகாது. முடிகளில் தண்ணீர் விட்டு சுத்தம் செய்யும் போது, மிகவும் இதமாக கையாள வேண்டும். தலைமுடி என்பது, `எலாஸ்டிக்` தன்மையுள்ளது; மிகவும் மிருதுவானது.

லேசாக இழுத்தால் கூட அறுந்துவிடும். அதனால் வாரும் போதும், சிக்கெடுக்கும் போதும் மிகவும் நிதானமாக கையாள வேண்டும்.

விலை மலிவானது, புதிதாக வந்தது என்று சில காரணங்களால், அடிக்கடி ஷாம்புவை மாற்றக்கூடாது. அப்படி மாற்றினால், அது தான் தலைமுடிக்கு பாதிப்பை ஏற்படுத்தும். தலைமுடியில் ஷாம்புவை பயன் படுத்தும் போது, உச்சந்தலையில் ஆரம்பித்து, நிதானமாக நுனி முடிகள் வரை தடவி, சுத்தம் செய்ய வேண்டும். நரை முடி ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மன அழுத்தம் அதிகரித்தால் திடீரென சிலருக்கு நரைமுடி வளர ஆரம்பிக்கும். நரைமுடி எதனால் ஏற்படுகிறது என்பது இதுவரை மர்மமானது. எந்த நிபுணரும், இதனால் தான் நரை வருகிறது என்று உறுதியாக சொல்லவில்லை.

தலைமுடி கருகருவென வளரக்காரணம் உடலில் உள்ள மெலனின் என்ற சுரப்பி தான். மயிர்க்கால்களில் மெலனின் இருப்பதால் கருமையான முடி வளர்கிறது. அந்த சுரப்பி சுரப்பது குறைய ஆரம்பித்தால், வெள்ளையாக வளர்கிறது. நரை முடியை கருமுடியாக வளர வைக்க மேற்கொண்ட ஆராய்ச்சிகள் இதுவரை பலன் அளிக்கவில்லை. நரை முடியை மறைக்க ஒரே வழி "கலரிங்` செய்வது தான்.

தரமான "ஹேர் டை` வாங்கி பயன் படுத்துவதை விட, விலை மலிவான பொருட்களை தேடுவோர் அதிகரித்து விட்டனர். இதனால், பாதிப்பு தலைமுடிக்குத்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். தரக்குறைவான "ஹேர் டை`யில், `பாரா பெனிலின் டயாமின்` என்ற (பி.பி.டி.,) ரசாயனம் உட்பட சில ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதனால் சிலருக்கு அலர்ஜி ஏற்படுகிறது.

மருதாணி தான் `ஹென்னா` என்பது. மருதோன்றிச்செடி இலைகளில் உள்ள சிவப்பு சாயம் தான் மருதாணியாக பயன்படுகிறது. காயவைத்து, அதை பேஸ்ட்டாக பயன்படுத்துவதும் உண்டு. முன்பெல்லாம் வீட்டிலேயே தயாரிப்பதுண்டு. இப்போது கடைகளில் பாக்கெட்டாக விற்கப்படுகிறது. பாக்கெட் `ஹென்னா`வில் கலப்படம் காணப்படுகிறது. இயற்கையான மருதாணியை ஓரளவு கலந்து, பெரும்பாலும் பி.பி.டி.,தான் பயன்படுத்தப்படுகிறது. இயற்கையான மருதாணியை பயன்படுத்தினால் கையில் சிவப்பேற சில மணி நேரம் ஆகும். ஆனால், பாக்கெட் `ஹென்னா` பயன்படுத்தினால் சீக்கிரம் பலன் தரும். ஆனால், அது கெடுதலானது.

அடிக்கடி தலை வாரிக்கொண்டிருக்க வேண்டாம்; அப்படி செய்தால், தலைமுடி உதிருவது அதிகரிக்கும். மொட்டைபோட்டால் உடனே முடி அதிகமாக வளரும் என்று பலரும் இன்னமும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால் அதில் உண்மை இல்லை. தலையில் பரந்து வளரும் போது அதிகமாக இருப்பது போல தோன்றும். ஆனால், நுனியில் வளருவது தெரியாது. அதனால் மொட்டை போட்டால், அதிக முடி வளரும்; நரை போகும் என்பதெல்லாம் தவறான நம்பிக்கை.

Read more...

மென்மையான சருமம் வேணுமா?

நம்மில் பெரும்பாலானோர், தங்கள் சருமம் எந்த வகையை சேர்ந்தது என்பது பற்றி தெரியாமலே உள்ளனர்.


வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, சருமம் மூன்று வகைப்படும். இதில், மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமத்திற்கான பிற பொருட்களை பயன்படுத்தும் போது மிக கவனமாக இருக்க வேண்டும்.

மென்மையான சருமத்தை கண்டறிவது:

* சருமம் எளிதில் சிகப்பாக மாறுதல்.

* மாய்ச்சரைசர்கள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் சருமத்தில் எதிர் விளைவுகள் உண்டாதல்.

* சூரிய வெப்பத்தால், எளிதில் பாதிப்பிற்கு ஆளாதல்.

* வெப்பம் மற்றும் குளிர் ஆகிய இரண்டினாலும் விரைவாக பாதிக்கப்படுதல்.

மேற்கூறிய இந்த அறிகுறிகள் தென்பட்டால், அவை மிக மென்மையான சருமத்தினரை குறிக்கிறது.


மென்மையான சருமத்திற்கான பிரத்யேக கவனிப்புகள்:

மிக மென்மையான சருமத்தினர் அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதை முடிந்த வரை குறைக்க வேண்டும். வாசனையற்ற, கிளென்சிங் மூலம் சருமத்தை சுத்தப்படுத்திய பின், மாய்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

முகத்திற்கு செய்யப்படும் ஆவி பிடித்தல், கரும்புள்ளிகளை நீக்குதல் போன்றவை மென்மையான சருமத்திற்கு எரிச்சல் ஊட்டுபவை. எனவே, இவ்வாறான அழகு சிகிச்சைகள் செய்யப்படுவதற்கு முன், சரும நிபுணரை கலந்தாலோசிப்பது நல்லது. பதப்படுத்தப்பட்ட சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் ஆகியவை மென்மையான சருமத்தினருக்கு சிறந்தது.

உகந்த அழகு சாதனப் பொருட்கள்:

* எப்போதும் பவுடர் மேக்-அப் பயன்படுத்துவதே நல்லது. திரவ பவுண்டேஷன் பயன்படுத்தினால், சிலிக்கானை அடிப்படையாக கொண்ட பவுண்டேஷனை பயன்படுத்தலாம். அவை சருமத்திற்கு நல்லது.

* பழைய அழகு சாதனப் பொருட்கள் குறிப்பாக, கண்களுக்கான அழகு பொருட்களில், வாங்கி சிறிது நாட்கள் ஆனதை பயன்படுத்தக் கூடாது. பவுண்டேஷன் மற்றும் லிப்ஸ்டிக் ஆகியவற்றை ஒரு ஆண்டு வரை பயன்படுத்தலாம். மஸ்காரா மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையே பயன்படுத்த வேண்டும். பவுடர்கள் இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். மேலும், மேக்-அப் பிரஷ் மற்றும் ஸ்பான்ஜ்களை அடிக்கடி முறையாக சுத்தம் செய்ய வேண்டும்.

* கறுப்பு ஐ லைனர் மற்றும் மஸ்காராவை பயன்படுத்தவது நல்லது. ஏனென்றால் அவை அதிகளவில் அலர்ஜியை தோற்றுவிக்காது.

* பென்சில் ஐ லைனர் மெழுகை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுவதோடு, அவற்றில் பதப்படுத்தும் பொருள் குறைவாகவே சேர்க்கப் படுகிறது. இதனால், பென்சில் ஐ லைனர் பயன் படுத்துவது நல்லது. திரவ ஐ லைனரில், சேர்க்கப் படும் லேட்டக்ஸ் மென்மையான சருமத்தினர் சிலருக்கு ஒவ்வாமையை தோற்றுவிக்கலாம்.

* அதிகபட்சமாக, 10 பொருட்கள் மட்டுமே சேர்த்து தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதே நல்லது.

*எந்த ஒரு புதிய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்னும், சோதனை செய்து கொள்ள வேண்டும்.

* மென்மையான சருமத்தினர் ஒரு நாளைக்கு மூன்று முறைக்கு மேல் அடிக்கடி முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும். அடிக்கடி முகம் கழுவினால், தோலில் இயற்கையாக காணப்படும் எண்ணெய் தன்மை போய்விடும்.

Read more...

திருமணத்திற்கு தயாரான பெண்ணுக்கு

மணப்பெண் அலங்காரம் என்பது நமது தமிழ் குடும்பங்களில் தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கமாகும். அக்காலத்தில் வாரம் இரு முறை எண்ணை தேய்த்து குளித்தல், வாரம் ஒரு முறை மஞ்சளுடன் தேங்காய் எண்ணை கலந்து உடல் முழுவதும், பூசுதல் மாதம் ஒரு முறை ஏதாவது ஒரு பண்டிகையை யொட்டி மருதாணி இட்டுக் கொள்ளுதல் போன்றவை அவர்களது தலைமுடி, முகம், கைகால்கள் ஆகியவற்றை எப்போதும் அழகாக வைத்துக்கொள்ள உதவுகிறது.


தற்கால பெண்களுக்கு படிப்பு, வேலை மற்றும் பல வேலைகள் இருப்பதால் இவற்றுக்கெல்லாம் நேரம் கிடைப்ப தில்லை. திடீரென திருமணம் நிச்சயமான வுடன் அவர்களுக்கு தங்களை அழகுப் படுத்திக் கொள்ளும் எண்ணம் அதிகமாகி றது. 6 மாதம் முன்னதாகவே திருமணம் நிச்சயமான பெண்களுக்கு அவர்களை தயார் செய்து கொள்ள நிறைய நேரம் கிடைக்கிறது. மேலும் 3 மாதம், ஒரு மாதம் என்று குறைந்த நேரத்திலும் அவர்களை தயார் செய்ய பார்லர்களில் வித விதமான விதிமுறைகளை செயல்படுத்துகின்றனர்.

முதலில் 6 மாதம் முன்னதாக என்றால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கலாம். அவர்களுக்கு முதலில் தலைமுடியை மாதம் ஒரு முறை நன்றாக ஒயில் மசாஜ் செய்து ஹென்னா கண்டிஷனர் போட்டு வரலாம். முகத்துக்கு நல்ல தரமான பிளீச்சிங் மற்றும் பழ பேஷியல் செய்து முகத்தை பளபளப்பாக வைத்துக் கொள்ளலாம். அது மட்டுமல்லாமல் பெடிக்யூர், மெனிக்யூர் மாதம் ஒரு முறை செய்து கொண்டே வந்தால் கல்யாண நேரத்தில் நல்ல பலன் தெரியும். இவர்கள் திருமணத்துக்கு முதல் மாதமும், திருமணத்துக்கு முன்பும் ஒரு கோல்டன் பேஸியல், பிரெஞ் பெடிக்யூர், மெனிக்யூர் ஆகியவற்றை செய்து கொள்வதன் மூலம் அழகிய தோற்றத்தை பெறலாம். இந்த 6 மாதம் எப்பொழுது வெளியில் சென்றுவிட்டு வந்தாலும் சுத்தமான நீரினால் முகத்தை கழுவுதல், வெள்ளரிப் பிஞ்சை கண்கள் மேல் வைத்துக் கொள்ளுதல் எலுமிச்சை, தயிர் போன்றவற்றை முகம் மற்றும் கை, கால்களில் தடவி வருதல் ஆகியவற்றை செய்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் இது கூடுதல் பலனை அளிக்கும்.

இனி 3 மாதம் முன்னதாகவே தயாராக வேண்டிய மணப்பெண் முதல் மாதம் முதலே பிளீச்சிங் பேஷியல் அல்லது கோல்டன் பேஷியல் ஆகியவற்றை தவறாமல் செய்து கொள்வது நல்லது. இது முகப்பொலிவை உடனடியாக எடுத்துக் காட்டுகிறது. இது போல தலை முடியை பராமரிப்பதற்கும் சூடான எண்ணையில் மசாஜ் செய்வதோடு கூட வைப்ரேட்டர், ஹைபிரிகுவன்சியை உபயோகப்படுத்தி தலை முடியை பேன், பொடுகு, தொல்லை இல்லாமல் சுத்தமாக பராமரிக்க வேண்டும். இத்துடன் பெடிக்யூர் மற்றும் மெனிக்யூரையும் அவசியமாக செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் திருமணத்துக்கு முன் எந்தவிதமான தோல் பிரச்சினை, பொடுகுப் பிரச்சினைகளோ, கை, கால், நகங்களின் மூலம் உண்டாகும் பிரச்சினைகளோ வராமல் தவிர்க்கலாம். திருமணத்துக்கு 4 அல்லது 5 நாட்களுக்கு சிறப்பு மணமகள் பேக்கேஜ் என்ற ஒரு வசதியை செய்து கொள்ளலாம். 3 மற்றும் 4 மணி நேரம் செலவிட்டால் மணப் பெண்ணை உச்சி முதல் பாதம் வரை தயார் செய்து விடலாம்.

முதலில் தலை முடிக்கு சிறப்பான சூட்டுப் பருவத்தில் எண்ணையில் மசாஜ் செய்து ஹென்னா கண்டிஷனர் மூலம் முடியை சுத்தமாக்கி பளபளப்பாக வைத்த பின்னர் முகத்துக்கு பிளீச்சிங் செய்தவுடன் கோல்டன் பேஷியல் செய்து முகத்தின் சதைகளுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக் கச் செய்யலாம். கை, கால்களில் உள்ள நிறத்தை அதிகரிக்க முதலில் பிளீச்சிங் செய்து, பிறகு வேண்டாத முடியை நீக்க வெக்சிங் செய்கிறோம். இதன் மூலம் நிறம் அதிகரிப்பது மட்டு மல்லாமல் தோலும் மிருதுவாக இருக்கும். அதன் பிறகு பெடிக்யூர், மெனிக்யூர் ஆகியவற்றை பிரெஞ்ச் முறையில் செய்து பாதங்களையும், நகங்களையும் அழகு மிளிரச்செய்யலாம். திருமணத்துக்கு முன் உடல் முழுவதையும் மசாஜ் செய்து கொள்வது உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியையும், சுறு சுறுப்பையும் கொடுக்கும். இவை அனைத்தும் மணமகள் அலங்காரத்தில் அடங்கும்.

திருமணத்துக்கு 2 நாட்களுக்கு முன்பு கை, கால்களில் மெஹந்தி எனப்படும். மருதாணியால் போடும் டிசைன்களை இப்பொழுது பலரும் விரும்பிப் போட்டுக் கொள்கிறார்கள். மணமகள் மருதாணி அலங்காரம் என்பது முழங்கை வரை போடப்படும். ராஜஸ்தானி (இந்திய) மாதிரியாகவோ அல்லது அரேபிய டிசைனாகவோ போட்டுக் கொள்ளலாம். கறுப்பு மெஹந்தி என்று தற்போது போடும் கறுப்பு மெஹந்தி டிசைனையும் மணப்பெண் தவிர மற்றவர்கள் போட்டுக் கொள்கி றார்கள். கால்களுக் கும் கொலுசு டிசைன் முதல் காலை முற்றிலும் மூடும் ராஜஸ்தானி டிசைனையும் போட்டுக் கொள்ளலாம். தங்க கலர், சில்வர் கலர், கிலிட்டர்ஸ் ஆகியவற்றையும் வரவேற்பு நேரத்தில் போட்டுக் கொள்ளலாம்

மணப்பெண் திருமணமாவதற்கு 3 மாதத்திற்கு முன்பிருந்தாவது முறையான அழகுபராமரிப்பை மேற்கொள்ள வேண்டும். அப்போது தான் மணப்பெண்ணின் முக அழகானது வீடியோ, போட்டோவில் வசீகரமானதாகத் தெரியும். அரைத்தேக்கரண்டி எலுமிச்சபழ சாறுடன் சிறிது பால் சேர்த்து அத்துடன் கிளிசரின் சில துளிகள் விட்டு ஒன்றாகக் கலந்து 1/2 மணி நேரம் வைத்து விடுங்கள். பிறகு இதை எடுத்து இரவு படுப்பதற்கு முன்பு முகத்தில் நன்றாகப் பூசிக்கொள் ளுங்கள் காலையில் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இதை தினமும் தவறாமல் செய்து வந்தால் உங்களது முகம் அபாரமாக பளிச்சிடும். கனிந்த தக்காளியில் சாறு எடுத்து காலை பகலில் முகம் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் உலரவிடவும். பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவவும் தினமும் தொடர்ந்து செய்துவர முகம் சிறிது சிறிதாக நல்ல நிறத்தை அடைகிறது..

வெள்ளரிக்காயை மிக்சியில் அரைத்து சாறு எடுத்து முகம் முழுவதும் தடவி 25 நிமிடங்கள் உலரவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரில் கழுவினாலும் முகம் பளபளப்பு பெறும்..

பாதாமை அரைத்து பாலேட்டுடன் சேர்த்து சில துளிகள் பன்னீர் விட்டு முகத்தில் தடவிக்கொண்டு அரைமணி நேரம் உலரவிட்டு கழுவினால் முகம் பளிச் என்று ஆகிவிடும். தொடர்ந்து செய்து வந்தால் முகச் சுருக்கம் என்றால் என்னவென்று கேட்பீர்கள். தயிர்கூட மிகச்சிறந்த அழகு சாதனம்தான் முகத்தில் தயிரை தடவி வர உங்கள் முகம் இளமைப் பொலிவுடன் திகழும்.. முகத்திற்கு கிரீம் லோஷன், மொய் ஸரைஸர் என்று மாற்றி மாற்றி கவனத்துடன் ஒப்பனை செய்து கொள்ளும் நாம் கழுத்தை கவனிப்பதில்லை. நன்றாக உங்கள் முகத்தை கண்ணாடியில் பாருங்கள். முகம் பளிச் என்று இருக்கும் கழுத்து சம்மந்தமில்லாததுபோல கறுப்பாக இருக்கும். முகத்திற்கு எடுத்துக் கொள்ளும் கவனத்தை கழுத்திற்கும் எடுத்துக்கொள்வது நல்லது..

சில பெண்கள் வித விதமான உடையணிந்து முகத்தை ஒப்பனை செய்துகொண்டாலும் கைவிரல்களைப் பார்த்தால் தடிமனாகவும், சொர சொரவென்றும் பார்ப்பதற்கே விகாரமாக இருக்கும். இதற்கு காரணம் என்ன? அவர்கள் கைவிரல்களை சரியாக பராமரிக்காததுதான். சரிவர பராமரித்து அழகூட்டப்பட்ட விரல்களே உங்கள் அழகிற்கு மேலும் மெருகூட்டக்கூடியவை. வீட்டுவேலைகளின் போது உதாரணமாக பாத்திரம் கழுவுதல், துணி துவைத்தலின் போது கைகளில் ரப்பர் உறைகளைப் போட்டுக்கொள்வது அவசியம். உறைகளைப் பயன்படுத்துவதற்கு முன் ஏதாவது ஒரு ஹாண்ட் க்ரீம் தடவி கொள்ளுங்கள். . நகங்கள் மிகவும் மென்மையாக இருந்தால் ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் எடுத்து அதில் உப்பு சிறிதளவு போட்டு அதில் விரல் நகங்கள் படுமாறு சில நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து சில நாட்களுக்கு செய்து வர நகங்கள் உறுதி ஆகும். கைவிரல்கள் உலர்ந்து வெடிப்புகள் வராமலிருக்க ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறையாவது கிரீம் அல்லது தேங்காய் எண்ணெய்யை கைகளில் பரவலாகத் தடவி தேய்த்துவிட்டுக் கொள்ள வேண்டும்..

உள்ளங்கைகளும், விரல்களும் மிருதுவாக இருக்க தயிரைத் தடவித் தேய்த்துக் கொள்வதாலும் விரல்கள் மென்மைப்படும். எல்லாவித பேஸ் பேக்குகளுமே கைகளுக்கு பயன்படுத்த ஏற்றவை.. கடைகளில் விற்கும் ஹோண்ட் கிரீம்களைப் பயன்படுத்துவதைக் காட்டிலும் வீட்டிலேயே கிரீம் தயாரித்துக் கொள்ளலாம். அரை அவுன்ஸ் கிளிஸரினுடன் அரை அவுன்ஸ் பன்னீர் சேர்த்து ஹேண்ட் கிரீம் தயாரிக்கலாம். அல்லது கிளிஸரினுடன் தேன், எலுமிச்சம் பழச்சாறு கலந்தும் ஹேண்ட் கிரீம் தாயாரிக்கலாம்..

நகங்களில் அவ்வப்போது ஒலிவ் எண்ணெய் சிறிது எடுத்து மஸாஜ் செய்து கொள்வதால் நகங்கள் பலப்படும். ஒரு நாளைக்கு ஒரு முறையாவது க்ரீம் அல்லது ஒலிவ் எண்ணெயை எடுத்துக்கொண்டு கைவிரல்களை உருவி உருவித் தேய்த்து மஸாஜ் செய்து கொள்ள வேண்டும். விரல்களை மஸாஜ் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகும். நகங்கள் உறுதியில்லாமல் அவ்வப்போது உடைந்தாலோ அல்லது தெறித்து விட்டாலோ உடம்பில் போதுமான அளவு இரும்புச்சத்து அல்லது கல்சியம் சத்து இல்லை எனத்தெரிந்து கொள்ளலாம். அதிகமாக தண்ணீர் குடிப்பவர்களுக்கு நகங்கள் உறுதியாக இருக்கும்.

Read more...

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP