தெய்வமுரசு தனித்தமிழ் நாட்காட்டியின் சிறப்புகள் ::
Friday, April 23, 2010
தமிழில் எண்களின் வரிவடிவம் உண்டா என்று அறியாத தமிழிளந் தலைமுறைக்கு அவற்றை வழக்கில் உள்ள அரபு எண்களுக்குப் பதிலாக அறிமுகப்படுத்தல்.
மதியால் பெயர் பெறற மாதங்களின் பெயரைத தூய தமிழால் வழங்குதல்.
அமாவாசை - பௌர்ணமி, ஏகாதசி, சுக்லபட்சம்-கிருஷ்ணபட்சம் எல்லாம் நமக்கு ஏன்? மறைமதி-நிறைமதி, பதிற்றொருமை, வளர்பிறை-தேய்பிறை என அவற்றின் தூய தமிழ் வடிவங்களை உலா வரச் செய்தல்.
பண்டிகைகள்,விழாக்களைத் தமிழ்ப் பெயர்களால் வழக்கில் உலவவிடல்.
முகூர்த்தம்-முழுத்தம் என தூய தமிழால் வழங்கப் பெறல்.
நாயன்மார்கள்,மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் சிறந்த நாட்களின் குறிப்புகள் தமிழில்.
மொத்தத்தில் எண்ணிலும், எழுத்திலும், எதிலும் தமிழ் மணம்!
0 comments:
Post a Comment