கூடாரத்தில் ஒரு ஆங்கிலேய அழகி

Saturday, May 1, 2010


 
ஜீலு நாட்டில் மாவீரன் ஒருவன் இருந்தான். அவன் அந்த நாட்டு மன்னனிடம் சென்று அவனது மகளைத் தனக்கு திருமணம் செய்து தருமாறு கேட்டான்.


" நான் இடுகின்ற மூன்று கட்டளைகளை அணுவளவும் பிசகாது எவன் ஒருவன் செய்கிறானோ, அவனுக்கே என் மகளைத் திருமணம் செய்து தருவேன்" என்று அந்த மன்னன் அவனுக்கு பதில் அளித்தான்.

" அந்த முன்று கட்டாளைகள் என்னென? சொல்லுங்கள் மன்னவா! உடனே அவற்றை நிறைவேற்றி வைக்கிறேன்!" என்றான் அந்த மாவீரன்.

" நான் முன்று கூடாரங்களை ஏற்ப்டுத்தி வைத்திருக்கிறேன், முதல் கூடாரத்தில் பெரியதொரு சாராயப் பீப்பாய் இருக்கிறது. அதில் உள்ள சாராயம் முழுவதையும் ஒரே மூச்சில் குடித்து முடித்துவிட வேண்டும் "

" இந்தக் காரியத்தை முடித்த கையோடு உடனே இரண்டாவது கூடாரத்திற்க்குச் செல்ல வேண்டும் அங்கே பல்வலியால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் பைத்தியம் பிடித்த மனிதக் குரங்கு ஒன்று இருக்கும். ஏழு அடி உயரம் உள்ள அந்த மனிதக் குரங்கிற்க்கு தொல்லை தரும் பல் எது என்பதைக் கண்டுபிடித்து , அந்த பல்லை வெறுமனெ கையினாலேயே பிடுங்கி எறிய வேண்டும்."

இந்த வேலை முடிந்தவுடன் சிறிதும் தாமதியாது மூன்றாவது கூடாரத்திற்க்கு செல்லவேண்டும். அங்கே ஒரு ஆங்கிலேயப் பெண் இருப்பாள். எந்த ஒரு ஆண்மனும் அவளை உடலுறவில் முழுதும் திருப்தி செய்ய முடியாதபடி ஒரு தனிப் பயிற்சி பெற்றவளாக இருப்பாள். அவளோடு உடலுறவு கோண்டு அவளை முழுவதும் திருப்தி செய்ய வேண்டும் " என்றான் மன்னன்

" இது எனக்கு சாதாரணம் இப்போதே இதை செய்கிறேன்" என கூறிவிட்டு அந்த மாவீரன் முதல் கூடாரத்தினுள் நுழைந்தான். ஒரே மூச்சில் பீப்பாய் சாராயத்தையும் காலி செய்தான்.

பின்னர் பைத்தியம் பிடித்த மனிதக் குரங்கு இருக்கும் கூடாரத்தினுள் தடுமாறியபடி நுழைந்தான்.

அங்கே அவனுக்கும் அந்தக் மனிதக் குரங்குக்கும் ஒரு பயங்கரமான் சண்டை நடந்து. அந்த சண்டையில் அந்த கூடாரமே ஆட்டம் கண்டது. வேதனைக் கூக்குரல் விண்ணைப் பிளந்துது.அந்தக் மனிதக் குரங்கின் உடம்பின் மேலுள்ள முடிக்கற்றைகள் பறந்து வந்து வெளியே விழுந்தன.மனிதக் காது ஒன்றுகூட வெளியில் வந்து விழுந்து.
இந்த கூச்சலும் கூக்குரலும் சுமார் அரை மணி நேரம் நீடித்தது. சற்று அமைதி, பின் அந்தக் கூடாரத்திலிருந்து மாவீரன் தவழ்ந்து கொண்டே வெளியே வந்தான்.

தள்ளாடிக் கொண்டே எழுந்து நின்று அந்த மன்னனைப் பார்த்துக் கேட்டான்.

" சரி அரசே! இப்போது பல்வலியால் அவதிப்படும் அந்த ஆங்கிலேயப் பெண்மனி இருக்கும் இடத்தைக் காட்டுகிறீர்களா ?"
 
-ஓஷோ

0 comments:

Post a Comment

கார்த்திக் 24 உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறது.

About This Blog

நம் தளம் பற்றிய கருத்துகள் மற்றும் உங்கள் கதைகள் நம் தலத்தில் ஒலிபரப்பு செய்ய: kaarthik2008.vaalu24@blogger.com என்ற முகவரியில் பதிவு செய்யுங்கள், நன்றி...

adsforindians

Guru

நண்பர்கள் தளம்

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP